சைவம்

Tawa Paneer Masala Recipe In Tamil | ருசியான… தவா பன்னீர் மசாலா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… தவா பன்னீர் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

பல வீடுகளில் இரவு நேரத்தில் சப்பாத்தி தான் டின்னராக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று சப்பாத்தி என்றால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று நிச்சயம் மதியத்தில் இருந்து யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படிப்பட்டவர்கள், இன்று சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ்ஷாக தவா பன்னீர் மசாலாவை செய்து வீட்டில் உள்ளோரை அசத்தலாம். இது ஒரு எளிமையான ரெசிபி. முக்கியமாக 15 நிமிடத்தில் செய்து முடிக்கக்கூடிய அளவில் ஈஸியானது.

MOST READ: தஹி பன்னீர் கிரேவி

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 1 கப்

* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

* தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)

* குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)

* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்

* சீரகப் பொடி – 3/4 டீஸ்பூன்

* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்

* காய்ந்த வெந்தய கீரை – 1 டீஸ்பூன்

* கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை:

* தவா பன்னீர் மசாலா செய்வதற்கு முதலில் தவா தேவை. ஒருவேளை தவா இல்லாவிட்டால், கடாயை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இப்போது ரெசிபிக்கு போகலாம்.

* அடுப்பில் தவாவை வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.

* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு, நன்கு வதக்க வேண்டும்.

* அதன் பின் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

* அடுத்து அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி, மிளகாய் தூள், சீரகப் கொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி நன்கு கிளறி விட வேண்டும்.

* தக்காளி நன்கு வெந்து பச்சை வாசனை போன பின், மசாலாவானது நீரின்றி வறண்டு இருக்கும். அப்போது சிறிது நீர் தெளித்து, பன்னீர் துண்டுகளை சேர்த்து, மசாலா பன்னீருடன் சேருமாறு நன்கு கிளறி விட வேண்டும்.

* இறுதியில் அதன் மேல் காய்ந்த வெந்தய கீரையை கையால் நசுக்கி தூவி, கொத்தமல்லியையும் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தவா பன்னீர் மசாலா தயார்!

குறிப்பு:

* மசாலா பொடிகளை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.

* மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு செமி கிரேவி.
* தக்காளியை அரைத்து ஊற்ற விரும்பாதவர்கள், அப்படியே துண்டுகளாக்கியும் பயன்படுத்தலாம்.

IMAGE COURTESY

இந்த பதிவின் மூலமாக ருசியான… தவா பன்னீர் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… தவா பன்னீர் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

About the author

admin

Leave a Comment