நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மசாலா பாவ் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தேவையான பொருட்கள்:
* பாவ் பன் – தேவையான அளவு
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* வெண்ணெய் – தேவையான அளவு
* வெங்காயம் – 1 (பெரியது மற்றும் பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் – 1/2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி – 4 (பொடியாக நறுக்கியது)
* பால் பாஜி மசாலா பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கொத்தமல்லி – பொடியாக நறுக்கியது
* எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
* ஒரு தட்டையான பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் குடைமிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து 6-7 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் பாவ் பாஜி மசாலா, காஷ்மீரி மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி, சில நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது நீரை ஊற்றி நன்கு 5 நிமிடம் கொதிக் வைக்க வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லியைத் தூவி நன்க கிளறி இறக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அடுப்பில் அதே பேனை வைத்து, அதில் சிறிது வெண்ணெய் சேர்த்து உருகியதும், பாவ் பன்னை இரண்டாக வெட்டி பேனில் வைத்து முன்னும் பின்னும் டோஸ்ட் செய்த பின், அதன் மேல் தயாரித்த மசாலாவை வைத்து எடுத்தால், மசாலா பாவ் தயார்.
இந்த பதிவின் மூலமாக மசாலா பாவ் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மசாலா பாவ் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .