நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… வெந்தய கார குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
ஊரடங்கு காலம் என்பதால் நம்மால் அனைத்தையும் ஒரே வேளையில் ஞாபகம் வைத்து வாங்கி வைத்துக் கொள்ள முடியாது. சில சமயங்களில் சமையலுக்கு வேண்டிய காய்கறிகளைக் கூட வாங்க மறந்துவிடுவோம். அப்படி உங்கள் வீட்டில் சமைப்பதற்கு காய்கறிகள் இல்லாவிட்டால் கலவைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் வெந்தயம் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு அற்புதமான சுவையுடைய கார குழம்பு செய்யலாம். இந்த வெந்தய கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் – 8-10 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* புளி பேஸ்ட்- 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – ஒரு டீஸ்பூன்
* எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
அரைப்பதற்கு…
* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் – 3/4 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து, பெருங்காயத் தூள் மற்றும் வரமிளகாய் சேர்த்து ஒருமுறை வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். அடிப்பிடிப்பது போல் இருந்தால், சிறிது நீரைத் தெளித்துக் கொள்ளுங்கள்.
* இப்போது அதில் புளி பேஸ்ட் மற்றும் ஒரு கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அதற்குள் மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை குழம்பில் சேர்த்து, வேண்டுமானால் அரை கப் நீரை ஊற்றி, மீண்டும் 3-4 நிமிடம் பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான வெந்தய கார குழம்பு தயார்.
Image Courtesy: naliniscooking
இந்த பதிவின் மூலமாக ருசியான… வெந்தய கார குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… வெந்தய கார குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…