நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளோருக்கும் டீ, காபி கொடுக்கும் போது ஒரு அசத்தலான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அதுவும் சற்று வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க வேண்டுமா? அப்படியானால் தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடையை செய்து கொடுங்கள்.
இது தஞ்சாவூரில் உள்ள ஐயர் வீட்டில் செய்யக்கூடிய ஒரு பிரபலமான ஸ்நாக்ஸ் ஆகும்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி – 1/2 கப்
* துவரம் பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – 3/4 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* மிளகு – 3/4 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் – 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 3/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
* எண்ணெய் – 3-4 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் அரிசி மற்றும் பருப்பை நீரில் 2 முறை கழுவி, நீரில் குறைந்தது 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் பருப்பு மற்றும் அரிசியில் உள்ள நீரை முற்றிலும் வற்றிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சீரகம், உப்பு மற்றும் மிளகு சேர்த்து சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, துருவிய தேங்காயை போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ளதை சேர்த்து, சிறிது நீர் ஊற்றி, நீர் முற்றிலும் வற்றும் வரை வேக வைத்து இறக்கி, 2-3 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* மாவானது வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும் போது, தயாரித்து வைத்துள்ள மாவை சிறு எலுமிச்சை உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் எண்ணெய் தடவிய வாழை இலையில் ஒவ்வொரு உருண்டைகளையும் வைத்து, தட்டையாக தட்டிக் கொண்டு, நடுவே ஒரு ஓட்டையை போட வேண்டும்.
* பின்பு ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் தட்டி வைத்துள்ளதைப் போட்டு, அதன் மேல் சிறிது எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும், பொன்னிறமாகும் வரை வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டி தோசைக் கல்லில் போட்டு பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான தஞ்சாவூர் தவலை அடை தயார்.
Image Courtesy: naliniscooking
இந்த பதிவின் மூலமாக தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி தஞ்சாவூர் ஸ்பெஷல் தவலை அடை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…