நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சுவையான… காளான் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இரவு வேளையில் சப்பாத்தி செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? சப்பாத்திக்கு எப்போதும் ஒரே மாதிரியான கிரேவி, மசாலா செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியானால் காளான் மசாலாவை செய்து சுவையுங்கள். காளான் மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதம், பூரி போன்றவற்றிற்கும் அற்புதமாக இருக்கும்.
சைவ பிரியர்களுக்கு அசைவ உணவின் சுவையைக் கொடுக்கும் ஓர் உணவுப் பொருள் என்றால் அது காளான் தான். இத்தகைய காளானில் உடலுக்கு நன்மை விளைவிக்கும் சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* பட்டை – 1 துண்டு
* ஏலக்காய் – 2
* கிராம்பு – 2
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
* தக்காளி – 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* காளான் – 200 கிராம் (நறுக்கியது)
* உப்பு – தேவையான அளவு
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பின், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு, மூடி வைத்து மென்மையாகும் வரை வேக வைக்கவும்.
* அதே சமயம் ஒரு பௌலில் மல்லித் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள், கரம் மசாலா ஆகியவற்றை ஒன்றாக எடுத்து, சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்து வைத்துள்ள பேஸ்ட்டை வதங்கிக் கொண்டிருக்கும் தக்காளியுடன் சேர்த்து கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* வாணலியில் உள்ள கலவையில் இருந்து பச்சை வாசனை முற்றிலும் போனதும், நறுக்கி வைத்துள்ள காளானை சேர்த்து, உப்பு தூவி கிளறி விட்டு, தேவையான அளவு நீர் சேர்த்து மூடி வைத்து 5-10 நிமிடம் காளானை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான மற்றும் காரமான காளான் மசாலா ரெடி!
Image Courtesy
இந்த பதிவின் மூலமாக சுவையான… காளான் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சுவையான… காளான் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…