குறுவை சாகுபடி (samba kuruvai cultivation) சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ. 9.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் வேளாண்மைத் துறை முதன்மைச் செயலர் சந்தீப் சக்சேனா. தஞ்சை ஆட்சியரகத்தில் தஞ்சாவூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியர் என். சுப்பையன் தலைமை வகித்தார். வேளாண் இயக்குநர் மு. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் சந்தீப் சக்சேனா பேசியது:
குறுவை சாகுபடியை மேற்கொள்ள 7 அம்ச திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 12 மணி நேர தடையில்லாத மும்முனை மின்சாரம், நீர் ஆதாரங்களில் இருந்து வயலுக்கு நீர் வீணாகாமல் கொண்டு செல்ல உதவும் வகையில் 600 அடி குழாய்கள் 7 ஆயிரம் விவசாயிகளுக்கு 100 சத மானியத்தில் வழங்கப்படுதல் என்பது உள்ளிட்ட 7 அம்ச திட்டங்களை செயல்படுத்துவதற்காக டெல்டா முழுமைக்கும் ரூ. 32.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடி சிறப்புத் திட்டத்தின் அடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு ரூ.9.19 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காவிரி நீர் வரும்போது வாய்க்கால் பாசனம் மூலம் 13,000 ஹெக்டரிலும், நிலத்தடி நீர் ஆதாரத்தை பயன்படுத்தி 31,000 ஹெக்டரிலும் என மொத்தம் 44,000 ஹெக்டரில் நடப்பாண்டில் குறுவை நெல் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை குறுவை பருவத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் 5,790 ஹெக்டரிலும், இயல்பான சாகுபடி முறையில் 3,167 ஹெக்டரிலும், என மொத்தம் 8,907 ஹெக்டர் நிலப்பரப்பிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
குறுவை சாகுபடிக்கு தேவையான தரமான சான்று பெற்ற ஆடுதுறை-43, ஆடுதுறை-45 ரக நெல் விதைகள் 41 மெட்ரிக் டன் வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், 103 மெட்ரிக் டன் தனியார் நிறுவனங்களிலும் இருப்பு வைத்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குறுவை பருவத்திற்கு தேவையான யூரியா 6,532 மெட்ரிக் டன் கூட்டுறவு நிறுவனங்களிலும் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இருப்பு வைத்து விநியோகிக்கப்படுகிறது. டி.ஏ.பி 1991 மெட்ரிக் டன் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இருப்பு வைத்து விநியோகிக்கப்படுகிறது. பொட்டாஷ் 1215 மெட்ரிக் டன் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களிலும் இருப்பு வைத்து விநியோகிக்கப்படுகிறது என்றார் சந்தீப் சக்சேனா.
கூட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை முதன்மை பொறியாளர் எம். செந்தில், மூன்று மாவட்ட வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள், மின்சார வாரியம், பொதுப்பணித் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…