நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சாமை கட்லெட் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தற்போது பலரும் தங்கள் உணவுகளில் சிறுதானியங்களை அதிகம் உணவில் சேர்த்து வருகிறார்கள். சிறுதானியங்களைக் கொண்டு வெறும் உப்புமா, கஞ்சி மட்டும் தான் செய்ய முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது தவறு. சிறுதானியங்களைக் கொண்டு பல சுவையான ஸ்நாக்ஸ்களையும் செய்யலாம். குறிப்பாக பலரும் விரும்பி சாப்பிடும் கட்லெட்டுகளை செய்து சாப்பிடலாம். இன்று நாம் காணவிருப்பது சிறுதானியங்களில் ஒன்றான சாமை கட்லெட் பற்றி தான்.
சாமை கட்லெட் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* சாமை – 2 கப் (வேக வைத்தது)
* எண்ணெய் – 1 டீஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* சிறிய கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் – 1/2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் – 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், கேரட், குடைமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் மிளகாய் தூள், கரம் மசாலா, தக்காளி கெட்சப், உப்பு சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள சாமையை சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின் அதில் கொத்தமல்லியை சேர்த்து நன்கு கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் தட்டி வைத்துள்ள கட்லெட்டுகளைப் போட்டு எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சாமை கட்லெட் தயார்.
இந்த பதிவின் மூலமாக சாமை கட்லெட் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சாமை கட்லெட் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…