நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான அரிசி பக்கோடா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் டீ, காபி குடிக்கும் போது பலருக்கும் சூடாகவும் மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும்.
9 வருடமாக அவதிப்படும் சிறுமி.. ஆபரேஷன் செய்ய உதவுங்கள்!
தேவையான பொருட்கள்:
* சாதம் – 3/4 கப்
* கடலை மாவு – 1/2 கப்
* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* காலிஃப்ளவர் – 1/4 கப்
* உருளைக்கிழங்கு – 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 3 பல்
* பச்சை மிளகாய் – 4-5 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – 1/2 இன்ச்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/8 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் இஞ்சி, பூண்டு மற்றும் சோம்பை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடாவதற்குள், ஒரு பௌலில் சாதத்தைப் போட்டு கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அதில் கடலை மாவு, சோள மாவு மற்றும் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது மற்றும் மற்ற பொருட்களையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து, நீர் சேர்க்காமல் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்து வைத்துள்ள கலவையை சிறிது எடுத்து, அடுப்பில் சூடாகி கொண்டிருக்கும் எண்ணெயில் உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்தையும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சுவையான அரிசி பக்கோடா தயார்.
குறிப்பு:
* இந்த பக்கோடாவிற்கு முட்டைக்கோஸ், குடைமிளகாய், கேரட் போன்ற காய்கறிகளையும் பயன்படுத்தலாம்.
* இந்த பக்கோடாவை தயாரித்த உடனேயே சாப்பிட்டால் தான் மொறுமொறுப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
*
Image Courtesy: naliniscooking
இந்த பதிவின் மூலமாக அரிசி பக்கோடா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி அரிசி பக்கோடா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…