நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது தான் பாலக் பன்னீர். இது பன்னீர் மற்றும் பாலக் கீரை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு சுவையான சைடு டிஷ். இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
இப்போது ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் ரெசிபியின் எளிய செய்முறைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாலக் – 4 கப்
* வெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* பட்டை – 1 துண்டு
* ஏலக்காய் – 4
* பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* பெரிய தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)
* பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி – 2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் – 200 கிராம்
* பிரஷ் க்ரீம் – 1/2 கப்
* உலர்ந்த வெந்தயக் கீரை – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். பின் அதில் பாலக் கீரையைப் போட்டு 2 நிமிடங்கள் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டிவிட்டு, கீரையை பிளெண்டரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருகியதும், சீரகம், பட்டை, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி, 5 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும்.
* அதன் பின் மிளகாய் தூள், சீரகப் பொடி, கரம் மசாலா, மல்லித் தூள் சேர்த்து சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.
* அடுத்து, அரைத்து வைத்துள்ள பாலக் கீரையை சேர்த்து நன்கு கிளறி விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி 1-2 நிமிடம் பன்னீரை வேக வைத்து வெந்ததும், காய்ந்த வெந்தய கீரை மற்றும் க்ரீம் சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் தயார்.
குறிப்பு:
* பாலக் கீரையை அதிகமாக வேக வைத்துவிடாதீர்கள். இல்லாவிட்டால், அதன் பச்சை நிறம் போய்விடும்.
* கடைகளில் விற்கப்படும் பன்னீரைப் பயன்படுத்துபவராக இருந்தால், அதை சிறு துண்டுகளாக வெட்டி, வெதுவெதுப்பான நீரில் போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து, பின் பயன்படுத்துங்கள்.
* ஒருவேளை உங்களிடம் க்ரீம் இல்லையென்றால், பாலில் சிறிது சோளமாவு சேர்த்து கலந்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
* பாலக் கீரையை சேர்த்த பின், மூடி வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அதன் நிறம் மாறிவிடும்.
இந்த பதிவின் மூலமாக ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…