நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரவா டோக்ளா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காபி, டீ குடிக்கும் போது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ரவா டோக்ளா செய்து கொடுங்கள். இது ஒரு சிறப்பான மற்றும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். வட இந்தியாவில் இது மிகவும் பிரபலமானது. மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.
தேவையான பொருட்கள்:
* ரவை – 1 கப்
* கெட்டி தயிர் – 1 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* சர்க்கரை – 1 டீஸ்பூன்
* இஞ்சி – 2 டீஸ்பூன் (துருவியது)
* எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா/சமையல் சோடா – 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* துருவிய தேங்காய் – சிறிது
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* எள்ளு விதைகள் – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் பிளெண்டரில் ரவையைப் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் பொடித்த ரவை, தயிர், உப்பு, சர்க்கரை, இஞ்சி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்து, நீர் சேர்த்து, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு இதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கி 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* பின் கத்தியால் அதை துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வேக வைத்துள்ள டோக்ளாவின் மேல் ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லி மற்றும் தேங்காயைத் தூவினால், சுவையான ரவா டோக்ளா தயார்.
இந்த பதிவின் மூலமாக ரவா டோக்ளா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரவா டோக்ளா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…