நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரமலான் ஸ்பெஷல்: கேரளா மட்டன் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
ரமலான் நோன்பு இருப்பவர்கள், மாலை வேளை நோன்பு முடித்த பின்பு நல்ல புரோட்டீன் நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் நல்லது. அதில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பர்.
MOST READ: ருசியான… சிக்கன் சாப்ஸ்
தேவையான பொருட்கள்:
* மட்டன் – 500 கிராம்
* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மசாலாவிற்கு…
* தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி – 2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 6 பல் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் – 3/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் கழுவிய மட்டன் துண்டுகளைப் போட்டு அடுப்பில் வைத்து, அத்துடன் மிளகுத் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் ஒரு கப் நீரை ஊற்றி, குக்கரை மூட வேண்டும். ஒரு விசில் வந்ததும் நெருப்பை குறைத்து, குறைவான தீயில் 30 நிமிடம் வேக வைக்க வேண்டும். 30 நிமிடம் கழித்ததும், அடுப்பில் இருந்து குக்கரை இறக்க வேண்டும். விசில் போனதும் குக்கரை திறக்க வேண்டும்.
* அடுத்து ஒரு பௌலில் மட்டன் துண்டுகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் உள்ள எஞ்சிய நீரை ஒரு பௌலில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் சோம்பு, இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.
* மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை குறைந்தது 2-3 நிமிடம் வதக்கவும்.
* அதன் பின் தனியாக வைத்துள்ள மட்டன் நீர் மற்றும் மட்டனை சேர்த்து, வேண்டுமானால் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும். நீரானது ஓரளவு வற்றியதும், அடுப்பை அணைத்து இறக்கினால், சுவையான கேரளா மட்டன் மசாலா தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக ரமலான் ஸ்பெஷல்: கேரளா மட்டன் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரமலான் ஸ்பெஷல்: கேரளா மட்டன் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…