நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ரமலான் ஸ்பெஷல் – சிக்கன் மீட்பால் சூப் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
ரமலான் நோன்பை முடித்த பின் மாலையில் சுவையான சூப் குடிக்க நினைத்தால், சிக்கன் மீட்பால் சூப் செய்து குடியுங்கள். இது மிகவும் ருசியாக இருப்பதோடு மட்டுமின்றி, உடலுக்கு சத்தானதும் கூட. பொதுவாக சூப் உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும். குறிப்பாக இந்த சூப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* இஞ்சி – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)
* கேரட் – 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் – 4 கப்
* சிக்கன் சூப் க்யூப் – 1 துண்டு
* சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் – 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப
* சோள மாவு – 1 டீஸ்பூன் (நீரில் கலந்து கொள்ளவும்)
* எலுமிச்சை சாறு – தேவையான அளவு
மீட்பால் செய்வதற்கு…
* சிக்கன் கொத்துக்கறி – 1 கப்
* வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* பிரட் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் முதலில் மீட்பால் செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒரு பௌலில் போட்டு நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், மீட்பால் உருண்டைகளைப் போட்டு, 8-10 நிமிடம் வேக வைத்து பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் சீரகம், இஞ்சி, பூண்டு, கேரட் ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் நீரை ஊற்றி, சிக்கன் சூப் க்யூப் சேர்த்து நன்கு 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் உப்பு, மிளகுத் தூள், சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இப்போது அதில் மீட்பால் சேர்த்து குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைத்து, பின் நீரில் கரைத்த சோள மாவு சேர்த்து கிளறி விட வேண்டும். இதனால் சூப் சற்று கெட்டியாகும்.
* இறுதியில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து இறக்கினால், சுவையான சிக்கன் மீட்பால் சூப் தயார்.
இந்த பதிவின் மூலமாக ரமலான் ஸ்பெஷல் – சிக்கன் மீட்பால் சூப் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ரமலான் ஸ்பெஷல் – சிக்கன் மீட்பால் சூப் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…