நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பஞ்சாபி ராஜ்மா (Punjabi Rajma) மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உங்கள் வீட்டில் ராஜ்மா என்னும் சிவப்பு காராமணி உள்ளதா? அதைக் கொண்டு ஒரு அற்புதமான ரெசிபி செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் வடஇந்தியாவில் மிகவும் பிரபலமான பஞ்சாபி ராஜ்மா மசாலா செய்யுங்கள். இந்த பஞ்சாபி ராஜ்மா மசாலா சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
* ராஜ்மா/சிவப்பு காராமணி – 3/4 கப்
* கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்
* உலர்ந்த வெந்தயக் கீரை – 1 சிட்டிகை
* பால் – 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு…
* மல்லி – 2 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தக்காளி – 2 (நறுக்கியது)
* பூண்டு – 4 பல்
* இஞ்சி – 1/2 இன்ச்
* பட்டை – 1/4 இன்ச்
* கிராம்பு – 2
* முதலில் காராமணியை 8 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின் அதை 2-3 முறை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு, காராமணி மூழ்கும் வரை நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 6-7 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, நீர் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் கரம் மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, வேக வைத்துள்ள ராஜ்மா/காராமணியை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* கிரேவியானது ஓரளவு கெட்டியாக ஆரம்பித்ததும், அதில் பால் சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லி, காய்ந்த வெந்தய கீரை சேர்த்து கிளறினால், சுவையான பஞ்சாபி ராஜ்மா மசாலா தயார்.
இந்த பதிவின் மூலமாக பஞ்சாபி ராஜ்மா மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பஞ்சாபி ராஜ்மா மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…