நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ப்ளைன் குருமா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பலரது வீடுகளில் இரவு வேளையில் சப்பாத்தியாகத் தான் இருக்கும். உங்கள் வீட்டில் இன்று இரவு சப்பாத்தி தான் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? அப்படியானால் சப்பாத்திக்கு ஒரு அற்புதமான சைடு டிஷ் ஒன்று உள்ளது. அது தான் ப்ளைன் குருமா.
இந்த குருமா செய்வது மிகவும் ஈஸி. மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். கீழே அந்த ப்ளைன் குருமாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். முக்கியமாக இந்த குருமா சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரி, தோசை, இட்லிக்கும் அற்புதமாக இருக்கும்.
MOST READ: சுவையான… காளான் மசாலா
குறிப்பு:
கீழே கொடுக்கப்பட்டுள்ள குருமாவில் விருப்பமிருந்தால் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் – 2 (நறுக்கியது)
* தக்காளி – 3 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 2
* பட்டை – 1
* கிராம்பு – 2
* ஏலக்காய் – 1
* பிரியாணி இலை – 1
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – தேவையான அளவு
அரைப்பதற்கு…
* தேங்காய் – 1 கப்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* கசகசா – 1/4 டீஸ்பூன்
* முந்திரி – 4
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் பச்சை மிளகாயை முழுதாக சேர்த்து வெள்ளையாகும் வரை வதக்கவும்.
* பின்பு அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* பிறகு தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். தக்காளி வதங்குவதற்குள், மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக வைத்துக் கொள்ளவும்.
* தக்காளி நன்கு வதங்கியதும், அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வதக்கி, சிறிது நீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து நன்கு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ப்ளைன் குருமா ரெடி!
இந்த பதிவின் மூலமாக ப்ளைன் குருமா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ப்ளைன் குருமா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…