நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பீர்க்கங்காய் சாம்பார் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பீர்க்கங்காய் உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு இது மிகவும் நல்லது. ஆனால் நிறைய பேருக்கு பீர்க்கங்காயை எப்படி சமைத்து சாப்பிடுவதென்றே தெரியாது. பீர்க்கங்காயை பலவாறு சமைத்து சாப்பிடலாம். நீங்கள் சாம்பார் பிரியர் என்றால், பீர்க்கங்காய் சாம்பாரை செய்து சாப்பிடுங்கள். இந்த சாம்பார் சாதத்துடன் மட்டுமின்றி, தோசையுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* பீர்க்கங்காய் – 1 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தக்காளி – 2 (நறுக்கியது)
* துவரம் பருப்பு – 1 கப்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* சாம்பார் பவுடர் – 3 டேபிள் ஸ்பூன்
* புளி – 1 நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உப்பு – சுவைக்கேற்ப
* கொத்தமல்லி – சிறிது
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 1
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி, மஞ்சள் தூள், வெங்காயம், தக்காளி சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பீர்க்கங்காயை சேர்த்து 4-5 நிமிடம் நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன் சாம்பார் பவுடரை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
* அதன் பின் புளிச்சாறு சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, சாம்பாரில் ஊற்றி கிளறினால், சுவையான பீர்க்கங்காய் சாம்பார் தயார்.
இந்த பதிவின் மூலமாக பீர்க்கங்காய் சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பீர்க்கங்காய் சாம்பார் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…