நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பட்டாணி மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பட்டாணி பலரும் விரும்பி சாப்பிடும் ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருள். இதில் புரோட்டீன் அதிகம் உள்ளது. உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அப்படியானால் வீட்டில் பட்டாணி இருந்தால், அதைக் கொண்டு ஈஸியான மசாலா செய்யுங்கள். இந்த பட்டாணி மசாலா சப்பாத்தியுடன் மட்டுமின்றி சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* பட்டாணி – 1 கப் (நற்பதமானது/உலர்ந்தது)
* சீரகம் – 1/2 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தக்காளி – 1 (நறுக்கியது)
செய்முறை:
* நீங்கள் உலர்ந்த பட்டாணியைப் பயன்படுத்தினால், அந்த பட்டாணியை நீரில் 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை குக்கரில் போட்டு நீரை ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். நற்பதமான பட்டாணியை பயன்படுத்தினால், இந்த பாயிண்ட்டை விடுங்கள்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளற வேண்டும்.
* அடுத்து வேக வைத்துள்ள பட்டாணியை சேர்த்த நன்கு கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான பட்டாணி மசாலா தயார்.
குறிப்பு:
* இந்த ரெசிபியில் உலர்ந்த பட்டாணி பயன்படுத்தப்பட்டுள்ளது. வேண்டுமானால் நற்பதமான பட்டாணியையும் பயன்படுத்தலாம்.
* வெககாயம் தக்காளி அரைக்கும் போது, அத்துடன் சிறிது தேங்காய் சேர்த்து, கிரேவி நல்ல ப்ளேவரில் இருக்கும்.
* நிறைய கிரேவி வேண்டுமானால், மொத்தமாக 3 தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக பட்டாணி மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பட்டாணி மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…