நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பன்னீர் மக்கானி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இன்று இரவு உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக செய்ய நினைக்கிறீர்களா? அதுவும், சப்பாத்தி, புல்கா என்று செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளீர்ளா? அப்படியானால் அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று நிச்சயம் யோசித்துக் கொண்டிருப்பீர்கள். அப்படியானால் அதற்கு இன்று பன்னீர் மக்கானி செய்யுங்கள். இந்த பன்னீர் மக்கானி செய்வதற்கு எளிமையாக இருப்பதோடு, அனைத்து வயதினமும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
கீழே பன்னீர் மக்கானியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பணிர்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் – 1 1/2 கப்
* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* பிரஷ் க்ரீம் – 1-2 டேபிள் ஸ்பூன்
* கசூரி மெத்தி/உலர்ந்த வெந்தயக்கீரை – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை – 1/4 டீஸ்பூன்
* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் (இறுதியில் சேர்க்க)
* உப்பு – சுவைக்கேற்ப
வதக்கி அரைப்பதற்கு…
* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தக்காளி – 4 (நறுக்கியது)
* சிறிய காஷ்மீரி மிளகாய் – 2
* சிறிய பச்சை மிளகாய் – 1
* இஞ்சி – 1/2 இன்ச்
* பூண்டு – 3 பல்
* பட்டை – 1 இன்ச்
* கிராம்பு – 2
* பச்சை ஏலக்காய் – 2
* கருப்பு ஏலக்காய் – 1
* பிரியாணி இலை – 1
* முந்திரி – 10
* வெண்ணெய் – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – 3/4 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் போட்டு, பொருட்கள் மூழ்கும் வரை நீரை ஊற்றி, மூடி வைத்து, மிதமான தீயில் 7-10 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் உள்ள பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் அனைத்தையும் எடுத்துவிட்டு, வாணலியை இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அதை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், மிளகாய் தூள் சேர்த்து, பின் அரைத்து வைத்துள்ளதை வடிகட்டியால் வடிகட்டி ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு ஒரு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் பிரஷ் க்ரீம், கசூரி மெத்தி, கரம் மசாலா, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் கிளறி இறக்கி மேலே சிறிது வெண்ணெயை வைத்தால், சுவையான பன்னீர் மக்கானி தயார்.
குறிப்பு:
* வெண்ணெயில் மிளகாய் தூள் சேர்த்ததும், உடனே அரைத்த விழுதை வடிகட்டி ஊற்ற வேண்டும். இல்லையெனில் கிரேவியின் நிறம் மாறிவிடும்.
* சாதாரண மிளகாய் தூளுக்கு பதிலாக காஷ்மீர மிளகாய் தூள் பயன்படுத்தினல் நிறம் இன்னும் அற்புதமாக இருக்கும்.
* மில்க் க்ரீமை அளவுக்கு அதிகமாக ச்ர்த்துவிட வேண்டாம்.
* கசூரி மெத்தியை தேயத்தோ, வறுத்தோ பயன்படுத்த வேண்டாம்.
இந்த பதிவின் மூலமாக பன்னீர் மக்கானி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பன்னீர் மக்கானி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…