நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பன்னீர் சீஸ் சாண்ட்விச் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
மாலை வேளையில் பசிக்கும் போது, அந்த பசியை ஆற்றும்படியான ஸ்நாக்ஸ் ஒன்றை செய்து சாப்பிட வேண்டுமா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சாண்ட்விச் பிடிக்குமா? அப்படியானால் உங்கள் வீட்டில் பிரட், சீஸ் மற்றும் பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு அற்புதமான சாண்ட்விச் செய்து சாப்பிடுங்கள். இந்த சாண்ட்விச் பெரியோர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டீஸ்பூன் + தேவையான அளவு
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* தக்காளி கெட்சப் – 3 டேபிள் ஸ்பூன்
* பன்னீர் – 1 கப் (துருவியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* துருவிய சீஸ் – தேவையான அளவு
* பிரட் துண்டுகள் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பாதி வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் கெட்சப் சேர்த்து கிளற வேண்டும்.
* அடுத்து அதில் பன்னீரை சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* பிறகு ஒரு பிரட் துண்டை எடுத்து, அதில் வதக்கிய பன்னீரைப் பரப்பி, அதன் மேலே சிறிது வெங்காயத்தைத் தூவி, அதன் மேல் துருவிய சீஸைத் தூவ வேண்டும்.
* அதன்பின் மேலே மற்றொரு பிரட் துண்டை வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பிரட் துண்டுகளை முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்து எடுத்து, இரண்டு துண்டுகளாக வெட்டினால், சுவையான சீஸ் பன்னீர் சாண்ட்விச் தயார்.
இந்த பதிவின் மூலமாக பன்னீர் சீஸ் சாண்ட்விச் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பன்னீர் சீஸ் சாண்ட்விச் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…