Categories: சைவம்

நுஜ்ஜிணுன்டே ரெசிபி /கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை செய்வது எப்படி /நுஜ்ஜின உண்டே ரெசிபி /வேக வைத்த பருப்பு உருண்டை ரெசிபி | கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை செய்வது எப்படி?

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை செய்வது எப்படி? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

நுஜ்ஜிணுன்டே ரெசிபி கர்நாடகவின் பாரம்பரிய உணவாகும். இதை காலை உணவாகவோ அல்லது ஸ்நாக்ஸ் ஆகவோ இதை தயாரிப்பர். இதில் நுஜ்ஜூ என்பதற்கு உடைத்த பருப்பு என்றும் உண்டே என்பதற்கு உருண்டைகள் என்றும் பொருள். எனவே தான் இந்த நுஜ்ஜின உண்டே என்பதற்கு உடைத்த பருப்பு உருண்டைகள் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கர்நாடக ஸ்டைல் காரசாரமான ஸ்நாக்ஸ் ஆனது துவரம் பருப்பு கொண்டு செய்யப்படுகிறது. இந்த ரெசிபியை துவரம் பருப்பு மற்றும் கடலை பருப்பு கொண்டும் செய்யலாம். உருண்டையானது குக்கர் அல்லது இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைக்கப்படுகிறது. இந்த ஸ்நாக்ஸ் கொழுப்பு குறைந்த உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆகும்.

இந்த வேக வைத்த பருப்பு உருண்டைகள் மோர் குழம்பு போன்ற தயிர் ரெசிபிக்கு சூப்பரான சைடிஸாக இருக்கும். இங்கே வெந்தயம் இலைகள் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்தலாம் அல்லது இல்லாமலும் செய்யலாம். இதற்குப் பதிலாக கேரட் மற்றும் கொத்தமல்லி இலைகளை பயன்படுத்தினால் சுவை இன்னும் பலமடங்கு அதிகரிக்கும்.

இந்த நுஜ்ஜின உண்டே ரெசிபியை எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலேயே செய்து விடலாம். இது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் என்பதால் குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது நல்லது. உங்கள் காலை உணவிற்கான இந்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்யை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.

Recipe By: சுமா ஜெயந்த்

Recipe Type: காலை உணவு

Serves: 20 உருண்டைகள்

துவரம் பருப்பு – 1 பெளல்

தண்ணீர் – 1/2 லிட்டர் +3 கப்

முழு பச்சை மிளகாய் (சிறியது) – 10-20 (மிளகாயின் காரத்தன்மைக்கு ஏற்ப சேர்த்து கொள்ளவும்)

இஞ்சி (தோலுரித்து) – 4 (1அங்குலம் அளவிற்கு)

தேங்காய் துருவல் – 1 கப்

தேங்காய் துண்டுகள்(நன்றாக நறுக்கியது) – 1/2 கப்

வெந்தயம் இலைகள் – 2 கப்

உப்பு – தேவைக்கேற்ப

சீரகம் – 2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் – கீரிஸிங்

1. துவரம் பருப்பை கலப்பதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்

2. இப்பொழுது 3 கப் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். 5-6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும்

3. முழு மிளகாயை மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும்

4. இப்பொழுது இஞ்சி துண்டுகளையும் அதனுடன் சேர்த்து கொள்ளவும்.

5. ஊற வைத்த துவரம் பருப்பில் ஒரு கைக்கரண்டி அளவு எடுத்து மிக்ஸி சாரில் சேர்க்கவும்.

6. கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

7. அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்

8. பிறகு மறுபடியும் ஒரு கைக்கரண்டி துவரம் பருப்பை அதே மிக்ஸி சாரில் போடவும்.

9. கொர கொரப்பாக அரைத்து அதையும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்

10. இந்த மேற்கண்ட முறையை நீங்கள் ஊற வைத்த துவரம் பருப்பு முழுவதையும் அரைக்கும் வரை செய்யவும்.

11. இது முடிந்ததும் தேங்காய் துருவலை சேர்க்கவும்

12. பிறகு அதனுடன் நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் சேர்த்து கொள்ளவும்

13. பிறகு வெந்தயம் இலைகள் மற்றும் உப்பு சேர்க்கவும்

14. எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்

15. பிறகு அதனுடன் சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

16. ஒரு இட்லி பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

17. இட்லி தட்டை அதன் மேல் வைக்க வேண்டும்.

18. இட்லி தட்டில் உள்ள குழிகளை எண்ணெய்யை கொண்டு தடவ வேண்டும்.

19. இப்பொழுது பருப்பு கலவையை கொஞ்சம் எடுத்து கைகளால் நீள் வட்ட வடிவில் பந்து மாதிரி உருட்ட வேண்டும்.

20. இந்த பந்துக்களை இட்லி தட்டில் வைக்க வேண்டும்

21. இப்பொழுது இட்லி பாத்திரத்தை மூடியால் மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்

22. மெதுவாக மற்றும் கவனமாக மூடியை திறந்து ஆவியுடன் கூடிய உருண்டைகளை எடுக்கவும்.

23. பிறகு அதை ஒரு தட்டிற்கு மாற்றி பரிமாறவும்.

1. துவரம் பருப்பை கலப்பதற்கு ஒரு பெளலில் எடுத்து கொள்ளவும்

2. இப்பொழுது 3 கப் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும். 5-6 மணி நேரம் கழித்து தண்ணீரை வடிகட்டி விடவும்

3. முழு மிளகாயை மிக்ஸி சாரில் போட்டு கொள்ளவும்

4. இப்பொழுது இஞ்சி துண்டுகளையும் அதனுடன் சேர்த்து கொள்ளவும்.

5. ஊற வைத்த துவரம் பருப்பில் ஒரு கைக்கரண்டி அளவு எடுத்து மிக்ஸி சாரில் சேர்க்கவும்.

6. கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

7. அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்

8. பிறகு மறுபடியும் ஒரு கைக்கரண்டி துவரம் பருப்பை அதே மிக்ஸி சாரில் போடவும்.

9. கொர கொரப்பாக அரைத்து அதையும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்

10. இந்த மேற்கண்ட முறையை நீங்கள் ஊற வைத்த துவரம் பருப்பு முழுவதையும் அரைக்கும் வரை செய்யவும்.

11. இது முடிந்ததும் தேங்காய் துருவலை சேர்க்கவும்

12. பிறகு அதனுடன் நறுக்கிய தேங்காய் துண்டுகளையும் சேர்த்து கொள்ளவும்

13. பிறகு வெந்தயம் இலைகள் மற்றும் உப்பு சேர்க்கவும்

14. எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்

15. பிறகு அதனுடன் சீரகம் சேர்த்து நன்றாக கலக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

16. ஒரு இட்லி பாத்திரத்தில் 1/2 லிட்டர் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்

17. இட்லி தட்டை அதன் மேல் வைக்க வேண்டும்.

18. இட்லி தட்டில் உள்ள குழிகளை எண்ணெய்யை கொண்டு தடவ வேண்டும்.

19. இப்பொழுது பருப்பு கலவையை கொஞ்சம் எடுத்து கைகளால் நீள் வட்ட வடிவில் பந்து மாதிரி உருட்ட வேண்டும்.

20. இந்த பந்துக்களை இட்லி தட்டில் வைக்க வேண்டும்

21. இப்பொழுது இட்லி பாத்திரத்தை மூடியால் மூடி 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்

22. மெதுவாக மற்றும் கவனமாக மூடியை திறந்து ஆவியுடன் கூடிய உருண்டைகளை எடுக்கவும்.

23. பிறகு அதை ஒரு தட்டிற்கு மாற்றி பரிமாறவும்.

இந்த பதிவின் மூலமாக கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை செய்வது எப்படி? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கர்நாடக ஸ்டைல் காரசாரமான பருப்பு உருண்டை செய்வது எப்படி? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

2 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

2 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

2 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

2 years ago