நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான காளான் மக்கானி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உங்கள் வீட்டில் சப்பாத்தி, பூரி செய்யும் போது, அதற்கு ஒரு அசத்தலான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு காளான் மக்கானி செய்யுங்கள். இந்த ரெசிபியை வீட்டில் உள்ளோருக்கு ஸ்பெஷலாக ஏதாவது செய்து கொடுக்க நினைக்கும் போது செய்து தரலாம். இந்த காளான் மக்கானியை வீட்டிற்கு விருந்தினர்கள் வந்திருக்கும் போது செய்து கொடுத்தால், அவர்களின் பாராட்டைப் பெறலாம்.
தேவையான பொருட்கள்:
* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி – 4 (அரைத்தது)
* காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
* க்ரீம் – 1/2 கப்
* கசூரி மெத்தி/காய்ந்த வெந்தயக் கீரை – 1 டேபிள் ஸ்பூன்
* காளான் – 200 கிராம் (நறுக்கியது)
* தண்ணீர் – தேவையான அளவு
* கொத்தமல்லி – ஒரு கையளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு, உப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அதன் பின் காளனை சேர்த்து 10 நிமிடம் வேக வைத்து, தேவையான அளவு நீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, குறைவான தீயில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கசூரி மெத்தி, க்ரீம், கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி 1 நிமிடம் கழித்து இறக்கி, மேலே வெண்ணெயை சேர்த்து கிளறினால், சுவையான காளான் மக்கானி தயார்.
இந்த பதிவின் மூலமாக காளான் மக்கானி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி காளான் மக்கானி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…