நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான முருங்கைக் கீரை சூப் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
சூப்புகளில் முருங்கைக்கீரை சூப் செய்வது மிகவும் சுலபம். முருங்கைக்கீரையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. முக்கியமாக இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே உடலில் இரத்தம் குறைவாக இருப்பவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்லது. அதோடு முருங்கைக்கீரை கண்களுக்கும் நல்லது.
MOST READ: மீல் மேக்கர் மஞ்சூரியன்
அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள முருங்கைக்கீரை சூப்பின் செய்முறையைப் படித்து முயற்சித்துப் பாருங்கள். இது நிச்சயம்
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்கீரை – 1 1/2 கப்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* நறுக்கிய பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 1 (நறுக்கியது)
* தண்ணீர் – 2 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முருங்கைக்கீரையை நீரில் இரண்டு முறை நன்கு அலசி, நீரை வடிகட்டிவிட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்கவும்.
* பின்பு பூண்டு சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி பொன்னிறமாக வதக்கவும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
* பிறகு கழுவி வைத்துள்ள முருங்கைக்கீரையை சேர்த்து 2-3 நிமிடம் பச்சை வாசனை போக வதக்கவும்.
* பின் வதக்கியதை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
* சூப்பானது நன்கு கொதித்த பின், சுவை பார்த்து வேண்டுமானால் உப்பு சேர்த்து, பின் மிளகுத் தூள் தூவி ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான முருங்கைக்கீரை சூப் தயார்.
குறிப்பு:
* 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முருங்கைக்கீரை சூப் கொடுப்பதாக இருந்தால், சூப்பை வடிகட்டி, வெறும் நீரை மட்டும் கொடுக்கலாம்.
* முருங்கைக்கீரையை அரைத்து பயன்படுத்த வேண்டாம். இல்லாவிட்டால் சூப் கசப்பாக இருக்கும்.
* முருங்கைக்கீரையை எப்போதுமே மரத்தில் இருந்து பிடுங்கிய அன்றே அல்லது மறுநாள் பயன்படுத்திவிட வேண்டும்.
* இன்னும் சுவையான முருங்கைக்கீரை சூப் வேண்டுமானால், இத்துடன் 1/4 கப் தேங்காய் பால் அல்லது பருப்பு வேக வைத்த நீரை சேர்த்துக் கொள்ளலாம்.
இந்த பதிவின் மூலமாக முருங்கைக் கீரை சூப் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி முருங்கைக் கீரை சூப் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…