நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான முருங்கைக்கீரை கூட்டு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கீரைகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது இன்னும் நல்லது. அதோடு இந்த கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இரத்தம் குறைவாக இருப்பவர்கள் அல்லது இரத்த சோகை உள்ளவர்கள் முருங்கைக்கீரையை அடிக்கடி சாப்பிடுவது, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட உதவும். பொதுவாக முருங்கைக்கீரை கொண்டு பொரியல் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் இந்த கீரையைக் கொண்டு கூட்டு செய்யலாம் தெரியுமா?
கீழே முருங்கைக்கீரை கூட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்கீரை – 2 கப்
* தக்காளி – 1 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1/2 டீபூன்
* சாம்பார் பவுடர் – 1/2 டீபூன்
* துவரம் பருப்பு – 1/4 கப்
* பாசிப் பருப்பு – 1/8 கப்
* தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
* கடுகு – 1 டீபூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீபூன்
* சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்தது)
* எண்ணெய் – 2 டீபூன்
* பச்சை மிளகாய் – 1 (நீளமாக கீறியது)
அரைப்பதற்கு…
* தேங்காய் – 2 1/2 டேபிள் பூன்
* சீரகம் – 1/2 டீபூன்
* தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
* பின்னர் குக்கரில் வறுத்த பாசிப்பருப்பு மற்றும் துவரம் பருப்பைப் போட்டு, 1 கப் நீர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, குக்கரை மூடி, 3 விசில் விட்டு இறக்கவும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தேங்காய், சீரகம் மற்றும் சிறிது நீர் சேர்த்து, மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு முருங்கைக்கீரையை சுத்தம் செய்து நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் தக்காளியைப் போட்டு மென்மையாக வதக்க வேண்டும்.
* பின் அதில் முருங்கைக்கீரை, மஞ்சள் தூள், சாம்பார் பவுடர் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நீரை ஊற்றி, சிறிது உப்பு தூவி மூடி வைத்து, கீரை நன்கு மென்மையாக வேகும் வரை வேக வைக்கவும்.
* கீரை நன்கு வெந்துவிட்டால், அதன் நிறம் சற்று மாறியிருக்கும். இப்போது வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறி, அரைத்த தேங்காய் விழுதையும் சேர்ர்த்து, சில நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்க விடவும்.
* மறுபுறம் மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் சின்ன வெங்காயத்தை நறுக்கிப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
* இறுதியில் தாளித்த கலவையை கீரையுடன் சேர்த்து கிளறி அடுப்பை அணைத்தால், முருங்கைக் கீரை கூட்டு தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக முருங்கைக்கீரை கூட்டு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி முருங்கைக்கீரை கூட்டு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…