நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
வட இந்தியாவில் பாவ் பாஜி, மசாலா பாவ் போன்றவை மிகவும் பிரபலமான சாட் உணவுப் பொருட்கள். இந்த வகை ஸ்நாக்ஸ்களை கடைகளில் தான் நாம் வாங்கி சாப்பிடுவோம். ஆனால் அவற்றையும் வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம் தெரியுமா? ஆம், அதிலும் மும்பையில் தெருவோரங்களில் விற்கப்படும் பிரபலமான மசாலா பாவ்வை எளிதில் வீட்டிலேயே செய்யலாம்.
மசாலா பாவ் மாலை வேளையில் அதுவும் மழைப் பெய்யும் போது சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* பாவ் பன் – 4
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 3/4 கப் (பொடியாக நறுக்கியது)
* குடைமிளகாய் – 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* வெண்ணெய் – 2 டீஸ்பூன் + டோஸ்ட் செய்ய 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – 1/4 கப்
மசாலா பொடிகள்:
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* பாவ் பாஜி மசாலா பொடி – 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
அலங்கரிக்க…
* கொத்தமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
* முதலில் ஒரு பெரிய தோசை தவாவை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
* பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் தக்காளி, குடைமிளகாய் சேர்த்து, தக்காளியின் பச்சை வாசனை போக நன்கு வேக வைக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா, மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் சிறிது தண்ணீரை ஊற்றி, உருளைக்கிழங்கு மசிப்பதைக் கொண்டு நன்கு மசித்து விட வேண்டும். மசாலா கெட்டியாகும் வரை வேக வைக்கவும்.
* இறுதியில் 1 டேபிள் ஸ்பூன் வெண்ணெய், கொத்தமல்லி சேர்த்து, தவாவின் ஒரு பக்கமாக தள்ளி வையுங்கள். மறு பக்கத்தில் சிறிது வெண்ணெய் வைத்து, அதன் மேல் பாவ் பன்னை இரண்டாக வெட்டி இரண்டு பக்கத்தையும் லேசாக டோஸ்ட் செய்து கொள்ளுங்கள். பின் வெட்டி டோஸ்ட் செய்த பக்கத்தில் மசாலாவைப் பரப்புங்கள். அதன் மேல் சிறிது நறுக்கிய வெங்காயம் மற்றும் கொத்தமல்லியைத் தூவி, மேலே சிறிது எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து சூடாக பரிமாறினால் சுவையான மசாலா பாவ் தயார்!
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மும்பை ரோட்டுக்கடை மசாலா பாவ் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…