நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான எளிய முறையில் பாசிப் பருப்பு கிச்சடி ரெசிபி செய்வது எப்படி ? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பாசி பருப்பு கிச்சடி என்பது தால் கிச்சடி என்று அழைக்கப்படுகிறது. இது காலை உணவிற்கு சிறப்பாக தயாரிக்கப்படும் கிச்சடி ஆகும். மேலும் இதை விநாயகா சதுர்த்தியின் ஸ்பெஷல் உணவாக தயாரித்து கடவுளுக்கு படைப்பர்.
இந்த மூங் தால் கி கிச்சடி பாசி பருப்பையும் அதனுடன் சில சமையல் பொருட்களையும் சேர்த்து செய்யும் ரெசிபி ஆகும். இந்த ரெசிபியை வெங்காயம் ஏதும் பயன்படத்தாமல் விநாயக சதுர்த்தியின் போது கடவுள் கணேசனுக்கு படைத்து மகிழ்வர். இதை வைத்து மேலும் துர்கா பூஜை போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்
இந்த தால் கிச்சடி எளிதாகவும் விரைவாகவும் வீட்டிலேயே செய்யக் கூடிய ஒரு வகை உணவாகும்.
நெய் சொட்ட சொட்ட மிதக்கும் அதன் நறுமணமும் இந்த பாசி பருப்பு கிச்சடியின் டேஸ்ட்டும் உங்கள் பசியை தூண்டும்.
நாக்கில் எச்சில் ஊற வைக்கும் இந்த பாசிப்பருப்பு கிச்சடி ரெசிபியை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
Recipe By: மீனா பந்தரி
Recipe Type: முக்கிய உணவு
Serves: 2
பாஸ்மதி அரிசி – 1/2 கப்
பச்சை பாசி பருப்பு உடைத்தது – 1/2 கப்
பெருங்காயம் – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
நெய்-1டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் – 5 கப் (ஊற வைக்க)
1.பாஸ்மதி அரிசியை சல்லடையில் போட்டு கொள்ளவும்
2.உடைத்த பச்சை பாசி பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்
3.இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
4.அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்
5.பிறகு சீரகம், பெருங்காயம் போட்டு வதக்கவும். சீரகம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
6.நன்றாக ஊற வைத்து கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்ப்பை சேர்க்க வேண்டும்.
7. நன்றாக கலந்து கொள்ளவும்
8. மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடியை சேர்க்க வேண்டும்
9. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
10. கொஞ்சம் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
11. குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை சமைக்க வேண்டும்
12. கேஸ் போகும் வரை காத்திருந்து பிறகு குக்கரை திறந்து நன்றாக கலக்கவும்
13. இப்பொழுது அந்த கிச்சடியை ஒரு பெளலுக்கு மாற்றி பரிமாறவும்.
1.பாஸ்மதி அரிசியை சல்லடையில் போட்டு கொள்ளவும்
2.உடைத்த பச்சை பாசி பருப்பையும் அதனுடன் சேர்க்கவும்
3.இந்த இரண்டு பொருட்களையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
4.அடுப்பில் குக்கரை வைத்து சூடானதும் நெய் ஊற்றவும்
5.பிறகு சீரகம், பெருங்காயம் போட்டு வதக்கவும். சீரகம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்.
6.நன்றாக ஊற வைத்து கழுவிய பாஸ்மதி அரிசி மற்றும் பாசி பருப்ப்பை சேர்க்க வேண்டும்.
7. நன்றாக கலந்து கொள்ளவும்
8. மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடியை சேர்க்க வேண்டும்
9. கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்
10. கொஞ்சம் உப்பு சேர்த்து 2 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
11. குக்கரை மூடி 4-5 விசில் வரும் வரை சமைக்க வேண்டும்
12. கேஸ் போகும் வரை காத்திருந்து பிறகு குக்கரை திறந்து நன்றாக கலக்கவும்
13. இப்பொழுது அந்த கிச்சடியை ஒரு பெளலுக்கு மாற்றி பரிமாறவும்.
இந்த பதிவின் மூலமாக எளிய முறையில் பாசிப் பருப்பு கிச்சடி ரெசிபி செய்வது எப்படி ? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி எளிய முறையில் பாசிப் பருப்பு கிச்சடி ரெசிபி செய்வது எப்படி ? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…