நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வெந்தயக்கீரை காளான் கிரேவி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உங்கள் வீட்டில் உள்ளோர் சப்பாத்திக்கு ஒரு வித்தியாசமான சைடு டிஷ் கேட்கிறார்களா? அப்படியானால் அசைவ உணவிற்கு இணையான சுவையைக் கொடுக்கும் காளான் கிரேவி செய்யுங்கள். அதுவும் வெந்தயக்கீரை காளான் கிரேவி செய்யுங்கள். இது சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* காளான் – 200-250 கிராம்
* தயிர் – 1/4 கப்
* வெந்தயக்கீரை – 1 கப் அல்லது உலர்ந்த வெந்தயக்கீரை – 1-2 டேபிள் ஸ்பூன்
* நெய் அல்லது எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 1-2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது – 1/2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி – 3 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
தாளிப்பதற்கு…
* பச்சை ஏலக்காய் – 2-3
* பட்டை – 1 இன்ச்
* கருப்பு ஏலக்காய் – 1
* பிரியாணி இலை – 1
* கிராம்பு – 2-3
செய்முறை:
* முதலில் காளானை நீரில் நன்கு கழுவி, நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் தயிர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் நறுக்கிய காளானை சேர்த்து பிரட்டி 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* வெந்தயக்கீரையை நன்கு நீரில் கழுவி, அதன் இலைகளை தனியாக எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வதக்கி, பின் வெங்காயத்தைப் போட்டு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் ஊற வைத்துள்ள காளான் மற்றும் வெந்தயக்கீரை அல்லது உலர்ந்த வெந்தயக்கீரையை சேர்த்து கிளறி, பின் அதில் 1/4-1/2 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, குறைவான தீயில் காளானை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து நீர் உள்ளதா என பார்த்து கிளறிவிடுங்கள். ஒருவேளை நீர் இல்லாவிட்டால், கிரேவிக்கு தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள்.
* காளான் நன்கு வெந்துவிட்டால், அடுப்பை அணைத்துவிட்டு, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெந்தயக்கீரை காளான் கிரேவி தயார்.
Image Courtesy: vegrecipesofindia
இந்த பதிவின் மூலமாக வெந்தயக்கீரை காளான் கிரேவி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வெந்தயக்கீரை காளான் கிரேவி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…