நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: கேரள ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ண ஜெயந்தி வந்துவிட்டது. இன்று பலரது வீட்டிலும் கிருஷ்ணருக்கு பிடித்தவாறு பால், வெண்ணெய், நெய் போன்றவற்றைக் கொண்டு பல பலகாரங்கள் செய்து படைப்பார்கள். இந்த வருடம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றால் உலகமே வீட்டில் முடங்கியுள்ளது. இதனால் கோவில்களுக்கு சென்று கிருஷ்ணரை வணங்க முடியாமல் பலரும் வீட்டிலேயே கிருஷ்ணரின் சிலையை வைத்து வழிபடுவார்கள்.
MOST READ: கிருஷ்ண ஜெயந்திக்கு எப்படி பூஜை செய்யணும், எவ்வாறு விரதம் இருக்கணும் தெரியாதா? இத படிங்க…
சிலர் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணரை நினைத்து விரதம் இருந்து, கிருஷ்ணருக்கு பிடித்த பலகாரங்களை சமைத்து படைத்து, கிருஷ்ணரின் பாதங்களை வீட்டில் வரைத்து, பூஜை செய்வார்கள். நீங்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று கிருஷ்ணருக்கு வித்தியாசமான அதே சமயம் ருசியான ஒரு இனிப்பை தயாரித்துப் படைக்க விரும்பினால், அதற்கு கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் சரியாக இருக்கும்.
இக்கட்டுரையில் கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து முயற்சித்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாசிப்பருப்பு – 1 கப்
* வெல்லம் – 1 கப் (துருவியது)
* நெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கெட்டியான தேங்காய் பால் – 1 கப்
* நீர் போன்ற தேங்காய் பால் – 2 1/2 கப்
* முந்திரி – 3 டேபிள் ஸ்பூன்
* உலர் திராட்சை – 3 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் – 4
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பாசிப்பருப்பை சேர்த்து 2 நிமிடம் நல்ல மணம் வரும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் நீர் போன்ற தேங்காய் பாலை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின் அதில் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் அல்லது பருப்பு வேகும் வரை மூடி வைக்க வேண்டும்.
* பருப்பு நன்கு வெந்த பின், வெல்லத்தை சேர்த்து 5 நிமிடம் நன்கு கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியில் அதில் கெட்டியான தேங்காய் பாலை சேர்த்து கிளறி விட்டு, அத்துடன் எஞ்சிய 1 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் வறுத்த முந்திரி, உலர் திராட்சையை சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் ரெடி!
இந்த பதிவின் மூலமாக கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: கேரள ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்: கேரள ஸ்டைல் பாசிப்பருப்பு பாயாசம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…