நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கொங்குநாடு சிக்கன் ப்ரை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மட்டுமின்றி கொங்குநாடு ரெசிபிக்களும் பிரபலமானவை. இவற்றில் உள்ள வித்தியாசம் அவற்றின் மசாலா தான். ஆனால் இவை இரண்டுமே தனித்துவமான சுவையைக் கொண்டிருக்கும். நீங்கள் வீட்டில் இந்த வார இறுதியில் வித்தியாசமான ஒரு சிக்கன் ரெசிபியை முயற்சிக்க நினைத்தால், கொங்குநாடு சிக்கன் ப்ரை ட்ரை செய்யுங்கள். இது செய்வதும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு…
* பட்டை – 2 இன்ச்
* மிளகு – 1 டீஸ்பூன்
* மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1/2 டீஸ்பூன்
* கசகசா – 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் – 10
* கொப்பறை தேங்காய் – 5 டேபிள் ஸ்பூன்
சிக்கனுக்கு…
* சிக்கன் துண்டுகள் – 1 கப்
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 1
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கறிவேப்பிலை – ஒரு கையளவு
* கொத்தமல்லி – சிறிது
* தண்ணீர் – 1 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நீர் ஊற்றி கழுவிக் கொள்ள வேண்டும்.
* ஒரு நாண்-ஸ்டிக் கடாயை அடுப்பில் வைத்து, அதில் பட்டை, கிராம்பு, மிளகு, மல்லி, சோம்பு மற்றும் கசகசாவை சேர்த்து நன்கு மணம் வரும் வரை வறுத்து, அத்துடன் வரமிளகாய் மற்றும் கொப்பறை தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நீர் சிறிது ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் கழுவிய சிக்கன், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி, சிக்கன் வெள்ளையாக நிறம் மாறும் போது, அதல் அரைத்த மசாலாவை சேர்த்து கிளறி, மிதமான தீயில் சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும்.
* சிக்கனில் இருந்து எண்ணெய் தனியாக பிரிய ஆரம்பிக்கும் போது,
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக கொங்குநாடு சிக்கன் ப்ரை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கொங்குநாடு சிக்கன் ப்ரை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…