நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
சக்க பிரதமன் என்பது கேரளாவில் செய்யப்படும் ஒரு பாரம்பரியமான பாயாசம். இது பலாப்பழத்தைக் கொண்டு செய்யக்கூடியது. பொதுவாக பாயாசத்தை வீட்டு விஷேசங்களின் போது செய்வோம். அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் நீங்கள் உங்கள் வீட்டில் வடை பாயாசத்துடன் சமைப்பீர்களானால், இந்த வாரம் பலாப்பழ பாயாசத்தை செய்யுங்கள். இந்த பாயாசம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும். மேலும் இந்த ரெசிபியானது ஓணம் பண்டிகையின் போது கேரளாவில் செய்யக்கூடியது.
தேவையான பொருட்கள்:
* கனிந்த பலாப்பழ துண்டுகள் – 12
* வெல்லம் – 1/2 கப்
* தண்ணீர் 1/4 கப்
* கெட்டியாக தேங்காய் பால் – 3/4 கப்
* நெய் – 3 டீஸ்பூன்
* முந்திரி – சிறிது
* பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் – 1 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பலாப்பழத்தை குக்கரில் போட்டு, அது மூழ்கும் அளவில் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரைத் திறந்து, நீரை வடிகட்டிவிட்டு, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் வெல்லத்தை நீரில் போட்டு கரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அந்த வாணலியில் வெல்ல நீரை ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு, பின் அரைத்து வைத்துள்ள பலாப்பழ விழுதை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பாயாசமானது ஓரளவு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் மீதமுள்ள நெய் மற்றும் தேங்காய் பாலை ஊற்றி ஒருமுறை கிளறி இறக்கி விட வேண்டும்.
* இறுதியாக அதில் வறுத்த முந்திரி, தேங்காய் துண்டுகள் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து கிளறினால், சுவையான கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம் தயார்.
குறிப்பு:
* விருப்பமுள்ளவர்கள் தேங்காய் பால் பாதியும், காய்ச்சிய பால் பாதியையும் சேர்த்துக் கொள்ளலாம்.
* தேங்காய் பால் சேர்த்ததும் கொதிக்க வைக்கக்கூடாது. இல்லாவிட்டால் பாயாசம் திரிய ஆரம்பித்துவிடும்.
* பாயாசத்தின் சுவையை இன்னும் அதிகரிக்க நினைத்தால், அதிகமாக நெய் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கேரளா ஸ்டைல் பலாப்பழ பாயாசம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…