நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கீரை சாம்பார் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று தான் கீரை. வாரம் ஒருமுறை உணவில் கீரையை சேர்த்து வந்தால், உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்துடன் பிற சத்துக்களும் கிடைக்கும். கீரையை பொரியல், கூட்டு, கடையல், சாம்பார் என்று பலவாறு நாம் நமது உணவில் சேர்க்கலாம். அதில் கீரை சாம்பார் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு கீரை சாம்பார் சாதம், தோசை, சப்பாத்தி, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* பூண்டு – 3
* பச்சை மிளகாய் – 3
* சின்ன வெங்காயம் – 10
* தக்காளி – 1
* சாம்பார் பவுடர் – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* முருங்கைக் கீரை/அரைக்கீரை – 250 கிராம்
* துவரம் பருப்பு – 1 கப்
* உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் துவரம் பருப்பை நன்கு கழுவி, குக்கரில் போட்டு தேவையான அளவு நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் சின்ன வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கீரையை சேர்த்து ஒரு நிமிடம் மென்மையாகும் வரை வதக்கி, பின் சாம்பார் பவுடர், மஞ்சள் தூள் சேர்த்து சிறிது கிளறி சிறிது நேரம் வேக வைக்க வேண்டும்.
* பின்னர் வேக வைத்துள்ள துவரம் பருப்பை நன்கு மசித்து சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி கிளறி, ஒரு நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, கொதித்துக் கொண்டிருக்கும் கீரை சாம்பாருடன் சேர்த்து இறக்கினால், சுவையான கீரை சாம்பார் தயார்.
Image Courtesy: steffisrecipes
இந்த பதிவின் மூலமாக கீரை சாம்பார் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கீரை சாம்பார் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…