நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கத்திரிக்காய் கார குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பலருக்கும் கார குழம்பு ரொம்ப பிடிக்கும். ஆனால் அதை மிகவும் ருசியாக மற்றும் பக்குவமாக செய்ய வராது.
இப்போது கத்திரிக்காய் கார குழம்பின் எளிய செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கத்திரிக்காய் – 1/2 கிலோ
* சின்ன வெங்காயம் – 10 (தோலுரித்தது)
* புளி – 1 எலுமிச்சை அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
* சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கார மசாலாவிற்கு…
* பெரிய வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தக்காளி – 2 (நறுக்கியது)
* மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் – 5
* தேங்காய் – 1/2 கப்
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
கார மசாலா செய்வதற்கு…
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் மல்லி மற்றும் வரமிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தேங்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் புளியை நீரில் ஊற்றி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
குழம்பு செய்வதற்கு…
* இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தைப் போட்டு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் கத்திரிக்காயை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் புளிச்சாற்றினை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி நன்கு 30 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் மேலே மிதக்க ஆரம்பிக்கும் போது, அதில் கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.
* இறுதியாக ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, குழம்பில் ஊற்றி கிளறினால், சுவையான கத்திரிக்காய் கார குழம்பு தயார்.
இந்த பதிவின் மூலமாக கத்திரிக்காய் கார குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கத்திரிக்காய் கார குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…