நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: நெய் அப்பம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கார்த்திகை தீபம் வரப்போகிறது. அந்த கார்த்திகை தீபத்தன்று பலரும் தீபங்களுடன் பூஜையின் போது ஒருசில பலகாரங்களை செய்து படைப்பார்கள். அதில் பொரியுருண்டை, வடை, மாவிளக்கு, அப்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த வருட கார்த்திகை தீபத்தன்று ஒரு அட்டகாசமான சுவையைக் கொண்ட பலகாரம் செய்ய நினைத்தால், நெய் அப்பம் செய்யுங்கள். இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியைக் கொண்டது.
இப்போது கார்த்தை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் எப்படி செய்வதென்று, அதன் செய்முறையைக் காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி அல்லது இட்லி அரிசி – 1 கப்
* உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
* துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
* அவல் – 2 டேபிள் ஸ்பூன்
* வெந்தயம் – 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – 1 சிட்டிகை
* சமையல் சோடா – 2 பெரிய சிட்டிகை
* துருவிய அல்லது பொடியாக்கப்பட்ட வெல்லம் – 1/2 கப் + 2 டேபிள் ஸ்பூன்
* ஏலக்காய் – 3
* நெய் – அப்பம் செய்ய தேவையான அளவு
செய்முறை:
* முதலில் அரிசி, வெந்தயம், உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் அவலை நீரில் 2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை நன்கு கழுவி, மிக்ஸர் ஜாரில் போட்டு, தண்ணீர் அதிகம் சேர்க்காமல் நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் துருவிய வெல்லம் மற்றும் ஏலக்காய் சேர்த்து கிளறி விட வேண்டும். மாவானது தோசை மாவு பதத்தில் இருக்க வேண்டும். எனவே அரைக்கும் போது அதிக நீரை சேர்த்து விடாதீர்கள்.
* பிறகு அரைத்த மாவை குறைந்தது 7 மணிநேரம் ஊற வையுங்கள். இதனால் அப்பம் நன்கு மென்மையாக இருக்கும். பின் அந்த மாவில் சமையல் சோடா சேர்த்து கிளறி, 10 நிமிடம் அப்படியே வையுங்கள்.
* அதன் பின்பு பணியார கல்லை அடுப்பில் வைத்து, ஒவ்வொரு குழியிலும் 1/2 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சூடேற்றுங்கள்.
* பின் ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றி, தீயைக் குறைத்து, மூடி வைத்து வேக வையுங்கள்.
* 2-3 நிமிடம் கழித்து, மூடியைத் திறந்து, அப்பத்தை திருப்பிப் போடுங்கள். அப்பம் நன்கு வெந்துவிட்டதா என்பதை அறிய ஒரு ஸ்பூனின் பின்புறத்தைக் கொண்டு குத்திப் பாருங்கள். மாவானது ஸ்பூனில் ஒட்டாமல் இருந்தால், அப்பம் தயாராகிவிட்டது என்று அர்த்தம். இப்போது சுவையான நெய் அப்பம் தயார்.
குறிப்பு:
* அப்பத்திற்கான மாவு மிகவும் கெட்டியாக இல்லதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கெட்யான மாவு, அப்பத்தை கடினமாக்கிவிடும்.
*வேண்டுமானால், அரைக்கும் போது, மாவுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காயை சேர்த்து கொள்ளலாம்.
* மாவை தயாரித்த பின் குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்தால், அப்பம் ருசியாக இருக்கும்.
*
* அப்பம் மிகவும் மென்மையாக இருக்க வேண்டுமானால், அரிசி மற்றும் பருப்புக்களை 5 மணிநேரம் ஊற வையுங்கள்.
IMAGE COURTESY
இந்த பதிவின் மூலமாக கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: நெய் அப்பம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி கார்த்திகை தீபம் ஸ்பெஷல்: நெய் அப்பம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…