Categories: சைவம்

Kadambur Poli Recipe | ருசியான… கடம்பூர் போளி

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… கடம்பூர் போளி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தற்போது வீட்டிலேயே இருப்பதால், பலரும் பல வித்தியாசமான ஸ்நாக்ஸ் ரெசிபிக்களை முயற்சித்து, வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுத்திருப்பார்கள். உங்கள் குழந்தைகள் மாலை வேளையில் இனிப்பாக ஏதேனும் ஸ்நாக்ஸ் கேட்டால், அவர்களுக்கு போளி செய்து கொடுங்கள். போளியில் பல வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மிகவும் பிரபலமான கடம்பூர் போளி. இது குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.

நீங்கள் இதுவரை கடைகளில் தான் போளியை சுவைத்தீர்களானால், இன்று உங்கள் வீட்டில் அதை வீட்டிலேயே செய்து சுவையுங்கள். அதிலும் கடம்பூர் போளியை வீட்டிலேயே எளிதில் செய்யலாம். கீழே அந்த கடம்பூர் போளியை எப்படி செய்வதென்று எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இன்று உங்கள் வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* மைதா மாவு – 1 கப்

* உப்பு – 1 சிட்டிகை

* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

* தண்ணீர் – தேவையான அளவு

* எண்ணெய் – 3-4 டேபிள் ஸ்பூன்

உள்ளே வைப்பதற்கு…

* கடலை பருப்பு – 1 கப்

* வெல்லம் – 3/4 கப்

* தேங்காய் – 1/4 கப் (துருவியது)

* ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

* நெய் – 2 டீஸ்பூன்

செய்முறை:

* ஒரு பௌலில் மைதா மாவு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

* பின் அதில் நீர் சேர்த்து மென்மையான மாவாக பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு அதன் மேல் எண்ணெய் தடவி, 30 நிமிடம் தனியாக ஊற வைத்து, சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.

* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பை போட்டு, நீர் ஊற்றி மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும். விசில் போனதும் அதில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு, கடலை பருப்பை நன்கு மென்மையாக மசித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளுங்கள்.

* பிறகு ஒரு வாணலியில் மசித்த கடலை பருப்பைப் போட்டு, வெல்லத்தை சேர்த்து 2-3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

* பின் அதில் தேங்காய் சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும். பிறகு அதில் ஏலக்காய் பொடி மற்றும் நெய் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும். கலவையானது நன்கு குளிர்ந்த பின் சிறு உருண்டைகளாக உருட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு சிறு வாழை இலையை எடுத்து, அதன் மேல் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொள்ளுங்கள்.

* இப்போது பிசைந்து வைத்துள்ள ஒரு மைதா மாவு உருண்டையை எடுத்து வாழை இலையின் மையப்பகுதியில் வைத்து தட்டையாக கையால் தேய்த்து, அதன் மேல் உருட்டி வைத்துள்ள கடலைப்பருப்பு உருண்டையை வைத்து மூட வேண்டும். பின் நெய் அல்லது எண்ணெயைத் தொட்டு மீண்டும் தட்டையாக போளி போல் தேய்த்துக் கொள்ள வேண்டும்.

* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் தேய்த்து வைத்துள்ள போளியைப் போட்டு எண்ணெய் அல்லது நெய் ஊற்றி, முன்னும் பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுத்தால், சுவையான கடம்பூர் போளி தயார்.

இந்த பதிவின் மூலமாக ருசியான… கடம்பூர் போளி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… கடம்பூர் போளி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

3 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

3 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

3 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

3 years ago