Categories: சைவம்

Independence Day Special: Paneer Vegetable Kurma Recipe In Tamil | சுதந்திர தின ஸ்பெஷல்: பன்னீர் வெஜிடேபிள் குருமா

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சுதந்திர தின ஸ்பெஷல்: பன்னீர் வெஜிடேபிள் குருமா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

உங்கள் வீட்டில் சப்பாத்தி, தோசை செய்யும் போது, அதற்கு என்ன சைடு டிஷ் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் கேரட், பட்டாணி ஆகியவற்றுடன் பன்னீரை சேர்த்து ஒரு அட்டகாசமான குருமா செய்யுங்கள். இந்த குருமா மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமானதும் கூட. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த மாதிரி குருமா செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

அதுவும் இந்த வருடம் 75 ஆவது சுதந்திர தினம் வரப்போகிறது. இந்த சுதந்திர தின ஸ்பெஷலாக, நமது தேசிய கொடியில் உள்ள நிறங்களைக் கொண்ட கேரட், பட்டாணி மற்றும் பன்னீர் சேர்த்து குருமா செய்து உங்கள் வீட்டில் உள்ளோரை அசத்துங்கள். கீழே உங்களுக்காக பன்னீர் வெஜிடேபிள் குருமா எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* பன்னீர் – 1/2 கப் (துண்டுகளாக்கப்பட்டது)

* வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)

* கேரட் – 2 (பொடியாக நறுக்கியது)

* பட்டாணி – 1 கையளவு

* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

* கொத்தமல்லி – சிறிது

* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

தாளிப்பதற்கு…

* கிராம்பு – 2

* பட்டை – 1 துண்டு

அரைப்பதற்கு…

* தேங்காய் – 1/2 கப்

* பச்சை மிளகாய் – 2

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* முந்திரி – 5

* வெங்காயம் – 1 (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் குக்கரில் கேரட் மற்றும் பட்டாணியைப் போட்டு சிறிது நீர் ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு தவாவை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, பன்னீர் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு அதே தவாவில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, பின் தேங்காயை சேர்த்து பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள பிற பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கியதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.

* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 1/2 முதல் 3/4 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* பின் குக்கரில் வேக வைத்துள்ள காய்கறிகள் மற்றும் பன்னீரை சேர்த்து, குறைவான தீயில் 5-7 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பன்னீர் வெஜிடேபிள் குருமா தயார்.

குறிப்பு:

* பன்னீரை வதக்காமலும் பயன்படுத்தலாம்.

* அரைக்கும் போது வேண்டுமானால், தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைத்துக் கொள்ளலாம்.

* ஃப்ளேவருக்கு வேண்டுமானால் ஒரு டீஸ்பூன் கரம் மசாலா சேர்த்துக் கொள்ளலாம்.

* இந்த குருமாவுடன் உருளைக்கிழங்கு, பீன் என எந்த காய்கறியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Image Courtesy: sharmispassions

இந்த பதிவின் மூலமாக சுதந்திர தின ஸ்பெஷல்: பன்னீர் வெஜிடேபிள் குருமா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சுதந்திர தின ஸ்பெஷல்: பன்னீர் வெஜிடேபிள் குருமா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

3 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

3 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

3 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

3 years ago