நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி? ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் உணவுப் பொருள் தான் பன்னீர். இந்த பன்னீரை நீங்கள் கடைகளில் தான் வாங்கி சமைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிதில் வீட்டிலேயே தயாரிக்கலாம். அதுவும் வெறும் இரண்டு பொருட்களைக் கொண்டே 30 நிமிடத்தில் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
* கொழுப்புமிக்க பால் – 2 லிட்டர்
* தயிர் – 1/2 கப்
செய்முறை:
* முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பால் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும். இப்போது பால் திரிந்து போக ஆரம்பிக்கும். பால் நன்கு திரிந்து நீர் முழுமையாக பிரிந்த பின் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின்பு ஒரு பெரிய வடிகட்டியின் மேல் சுத்தமான வெள்ளைத் துணியை விரித்த, அதில் திரிந்த பாலை ஊற்றி வடிகட்ட வேண்டும். அப்படி வடிகட்டும் போது குளிர்ந்த நீரை ஊற்றி கையால் கிளறிவிட்டு வடிகட்டுங்கள்.
* பிறகு அந்த துணியை மூட்டை போட்டு நன்கு கட்டி, அதில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து வெளியேற்றி, அதன் மேல் ஒரு கனமான பொருளை 30 நிமிடம் வைத்து எடுத்தால், பன்னீர் தயார்.
குறிப்பு:
* பாலை திரிய வைப்பதற்கு தயிருக்கு பதிலாக, எலுமிச்சை சாறு அல்லது வினிகரைப் பயன்படுத்தலாம்.
* பாலை திரிய வைத்து வடிகட்டிய பின்னர், குளிர்ந்த நீரில் நன்கு கழுவ வேண்டும். இதனால் பன்னீரில் உள்ள புளிப்புத்தன்மை நீங்கும்.
* வேண்டுமானால், தயாரித்த பன்னீரை உதிர்த்துக் கொள்ளலாம் அல்லது விருப்பமான வடிவத்திலும் வெட்டிக் கொள்ளலாம்.
இந்த பதிவின் மூலமாக வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி? எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி வீட்டிலேயே பன்னீர் செய்வது எப்படி? ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .