நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான குண்டூர் சிக்கன் வறுவல் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
ஆந்திரா உணவுகள் மிகவும் காரமாகவும், சுவையாகவும் இருக்கும். அதிலுல் குண்டூர் ரெசிபிக்கள் அற்புதமான ருசியுடன் இருக்கும்.
இந்த வாரம் நீங்கள் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை முயற்சிக்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள குண்டூர் சிக்கன் வறுவலை முயற்சித்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் – 1 கிலோ
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
* தக்காளி – 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் – 3 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 3-4
* கறிவேப்பிலை – சிறிது
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
வறுத்து பொடி செய்வதற்கு…
* மல்லி விதைகள் – 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் – 2-3
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* வெந்தயம் – 1/8 டீஸ்பூன்
* மிளகு – 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* பட்டை – 1 இன்ச்
* கிராம்பு – 2
* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதை ஒரு பௌலில் எடுத்து, அதில் தயிரை ஊற்றி, அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து பிரட்டி, குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து பொடி செய்வதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து, அதன் பின் துருவிய தேங்காய் மற்றும் சிறிது கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின் ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு கிளறி, அரை கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் சிக்கனை வேக வைக்க வேண்டும். சிக்கன் அடிப்பிடிக்காமல் இருக்க அவ்வப்போது சிக்கனை கிளறி விட வேண்டும். நீர் வற்றி சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து, அதில் பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கிளறி, 2 நிமிடம் குறைவான தீயில் வேக வைத்து இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான குண்டூர் சிக்கன் வறுவல் தயார்.
Image Courtesy: naliniscooking
இந்த பதிவின் மூலமாக குண்டூர் சிக்கன் வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி குண்டூர் சிக்கன் வறுவல் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…