நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பச்சை பயறு தால் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பச்சை பயறு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பச்சை பயறை கொண்டு குழம்பு, தால் என்று செய்து சாப்பிடலாம். இன்று உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்வதாக திட்டமிட்டிருந்தால், அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தால், பச்சை பயறு கொண்டு தால் செய்யுங்கள். இந்த தால் சப்பாத்திக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு – 1/2 கப்
* சின்ன வெங்காயம் – 10 (நறுக்கியது)
* தக்காளி – 1 (நறுக்கியது)
* கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – 2 1/2 கப்
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* பூண்டு – 2 பல்
* கறிவேப்பிலை – சிறிது
* மிளகு – 1/2 டீஸ்பூன்
மசாலா பொடிகள்…
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் பச்சை பயறை ஒரு கடாயில் போட்டு குறைவான தீயில் குறைந்தது 3-5 நிமிடம் வறுத்து இறக்கி, குளிர வைத்து, நீரில் அலசி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அதன் பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, கழுவி வைத்துள்ள பச்சை பயறை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, நீரை ஊற்றி குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளுஙகள்.
* விசில் போனதும் குக்கரை திறந்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும். பின் கடைந்த பச்சை பயறை மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி விட்டு இறக்கி, கொத்தமல்லியை மேலே தூவினால், பச்சை பயறு தால் தயார்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக பச்சை பயறு தால் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பச்சை பயறு தால் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…