நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாசிப்பருப்பு மோதகம் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
விநாயகருக்கு மோதகம் என்றால் ரொம்ப பிடிக்கும். வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு உங்கள் வீட்டில் உள்ள பிள்ளையாருக்கு மோதகம் செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் பாசிப்பருப்பு மோதகம் செய்யுங்கள். இந்த பாசிப்பருப்பு மோதகம் செய்வது மிகவும் சுலபம். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பூரணத்திற்கு…
* பாசிப்பருப்பு – 1/4 கப்
* துருவிய தேங்காய் – 1/2 கப்
* வெல்லம் – 1/2 கப்
* ஏலக்காய் – 1
மாவிற்கு…
* பச்சரிசி மாவு – 1/2 கப்
* உப்பு – 1 சிட்டிகை
* நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் வறுத்த பாசிப்பருப்பை குக்கரில் போட்டு, 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மிதமான தீயில் வைத்து 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு வேக வைத்த பாசிப்பருப்பை மசித்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் வெல்லத்தை நீரில் போட்டு அடுப்பில் வைத்து, நன்கு கரைய விட்டு இறக்கி வடிகட்டி, மீண்டும் அந்த பாகுவை அடுப்பில் வைத்து நுரைகட்ட கொதிக்க விட வேண்டும்.
* பின் அதில் மசித்த பாசிப்பருப்பு சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் துருவிய தேங்காய், ஏலக்காய் சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி இறக்கினால், பூரணம் தயார்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை போட்டு, அதில் நல்லெண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும். பின் அதில் சுடுநீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி, கரண்டியால் கிளறி சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* சூடு ஆறியதும், கைறால் நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து பிசைந்த மாவை சரிசமமாக பிரித்து உருண்டைகளாக உருட்டி, சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
* இப்போது தயாரித்து வைத்துள்ள பூரணத்தை சரிசமமாக பிரித்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு மாவு உருண்டையை எடுத்து கிண்ணம் போன்ற வடிவில் தட்டிக் கொண்டு, அதன் நடுவே ஒரு பூரண உருண்டையை வைத்து, மோதகம் போன்ற வடிவில் நன்கு மூடிக் கொள்ள வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து மாவையும் மோதகம் போன்று செய்து, இட்லி தட்டில் வைத்து, 5-8 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான பாசிப்பருப்பு மோதகம் தயார்.
Image Courtesy: rakskitchen
இந்த பதிவின் மூலமாக விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாசிப்பருப்பு மோதகம் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பாசிப்பருப்பு மோதகம் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…