நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தமிழ்நாட்டில் ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு மிகவும் பிரபலமானது. தண்ணி குழம்பு பார்ப்பதற்கு ரசம் போன்று இருக்கும். இதை சூப்பாகவும் அருந்தலாம் அல்லது இட்லி, தோசை, சாதத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* சிக்கன் – 250 கிராம்
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு – சுவைக்கேற்ப
* கொத்தமல்லி – சிறிது
மசாலா பவுடருக்கு…
* வரமிளகாய் – 6-8
* சீரகம் – 1 டீஸ்பூன்
* மிளகு – 1 டீஸ்பூன்
* அரிசி – 1 டீஸ்பூன்
* சோம்பு – 2 டீஸ்பூன்
* மல்லி – 3 டேபிள் ஸ்பூன்
மசாலா அரைப்பதற்கு…
* தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* சின்ன வெங்காயம் – 10
* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
* துருவிய தேங்காய் – 1/2 கப்
* மசாலா பவுடர்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வரமிளகாய், சீரகம், மிளகு, அரிசி, சோம்பு மற்றும் மல்லி விதைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து, அரைத்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.
* பின்பு அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் சிக்கனை சேர்த்து உப்பு தூவி, சிக்கனானது தானாக நீர் விட்டு வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.
* நீர் முற்றிலும் வற்றியதும், அதில் அரைத்த மசாலா மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பில் இருந்து எண்ணெய் நன்கு பிரிந்து வரும் போது, அதில் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு தயார்.
இந்த பதிவின் மூலமாக ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…