நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான பக்ரீத் ஸ்பெஷல்: செட்டிநாடு மட்டன் சாப்ஸ் குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
பக்ரீத் பண்டிகை அன்று உங்கள் வீட்டில் மட்டன் கொண்டு ஒரு அட்டகாசமான மற்றும் வித்தியாசமான ரெசிபியை உங்கள் வீட்டில் செய்ய விரும்புகிறீர்களா?
கீழே உங்களுக்காக பக்ரீத் ஸ்பெஷலாக செட்டிநாடு மட்டன் சாப்ஸ் குழம்பு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் – 500 கிராம்
* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் – 1
* சீரகம் – 1 டீஸ்பூன்
* மிளகு – 1 1/2 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* மல்லி – 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் – 2
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* கிராம்பு – 4
* பட்டை – 1 இன்ச்
* பிரியாணி இலை – 1
* உப்பு – சுவைக்கேற்ப
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
ஊற வைப்பதற்கு…
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* சீரகம் – 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை:
* முதலில் மட்டனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். பின் அந்த மட்டனை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 2-4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்துள்ள மட்டனைப் போட்டு, அத்துடன் சீரகம் மற்றும் வெங்காயத்தைப் போட்டு, ஒரு கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதேப் போல் தக்காளியையும் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மிளகு, மல்லி, வரமிளகாய் மற்றும் கடுகு சேர்த்து குறைவான தீயில் ஒரு நிமிடம் நன்கு வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கிராம்பு, பட்டை மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை ஊற்றி நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றி கிளறி, குறைவான தீயில் 25 நிமிடம் நன்கு வேக வைக்க வேண்டும். வேண்டுமானால் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி, சுவை பார்த்து உப்பு சேர்த்து ஒருமுறை கொதிக்க வைத்து இறக்கினால், செட்டிநாடு மட்டன் சாப்ஸ் குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக பக்ரீத் ஸ்பெஷல்: செட்டிநாடு மட்டன் சாப்ஸ் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி பக்ரீத் ஸ்பெஷல்: செட்டிநாடு மட்டன் சாப்ஸ் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…