நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான ருசியான… கறிவேப்பிலை குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இன்று மதியம் என்ன சமையல் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் இதுவரை செய்திராத ஒரு குழம்பை வீட்டில் உள்ளோருக்கு செய்து கொடுக்க விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் கறிவேப்பிலை அதிகம் உள்ளதா? அப்படியானால் அந்த கறிவேப்பிலையைக் கொண்டு குழம்பு செய்து கொடுங்கள். இந்த கறிவேப்பிலை குழம்பு மிகவும் ஆரோக்கியமானது. குறிப்பாக தலைமுடி பிரச்சனையை சந்திப்பவர்களுக்கு இந்த குழம்பு மிகவும் நல்லது. கறிவேப்பிலை குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* புளி – 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் – 1/4 கப்
* நாட்டுச் சர்க்கரை – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு…
* கறிவேப்பிலை – 1 கப்
* பூண்டு – 4
* இஞ்சி – 1/4 இன்ச் துண்டு
* வரமிளகாய் – 3
* பச்சை மிளகாய் – 1
* புளி – 1 சிறிய துண்டு
* துருவிய தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் கறிவேப்பிலையை நன்கு கழுவி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து 3 நிமிடம் வறுத்து, பின் புளி மற்றும் தேங்காயை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* அதன் பின் கறிவேப்பிலை சேர்த்து 1 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு, சிறிது நீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் புளியை நீரில் ஊற வைத்து, பிழிந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை மசாலா பேஸ்ட்டை சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, மல்லித் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பு கெட்டியாக ஆரம்பிக்கும் போது, தேவயைன அளவு நீரை ஊற்றி, குறைவான தீயில் 5-7 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* குழம்பின் நிறம் சற்று மாறி, எண்ணெய் மேலே பிரிய ஆரம்பிக்கும் போது, அதில் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கிளறி இறக்கினால், கறிவேப்பிலை குழம்பு தயார்.
குறிப்பு:
* கறிவேப்பிலை குழம்பு சற்று கெட்டியாகத் தான் இருக்க வேண்டும். மிகவும் நீராக இருக்கக்கூடாது.
* தேங்காயை வறுக்கும் போது கருகவிட்டுவிட வேண்டாம்.
* கறிவேப்பிலை குழம்பை ஃப்ரிட்ஜில் வைத்து 3-4 நாட்கள் வரை பயன்படுத்தலாம். சொல்லப்போனால் இந்த குழம்பை தயாரித்த உடனேயே சாப்பிடுவதை விட, மறுநாள் சாப்பிட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.
* வேண்டுமானால் மல்லித் தூளுக்கு பதிலாக சாம்பார் பொடியைப் பயன்படுத்தலாம்.
* முக்கியமாக இந்த குழம்பை மண்சட்டியில் சமைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக ருசியான… கறிவேப்பிலை குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி ருசியான… கறிவேப்பிலை குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .