நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
செட்டிநாடு ஸ்டைல் உணவுகள் அனைத்துமே தனிச்சுவையுடன் நன்கு காரமாகவும் இருக்கும்.
கீழே செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு ரெசிபியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* உருளைக்கிழங்கு – 5 (பெரிதாக நறுக்கியது)
* கத்திரிக்காய் – 1 கப் (நறுக்கியது)
* தக்காளி – 2 (நறுக்கியது)
* வெங்காயம் – 1 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது)
* சாம்பார் பவுடர் – 4 டேபிள் ஸ்பூன்
* புளி நீர் – 1 கப்
* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
* பூண்டு – 8 பற்கள்
* துருவிய தேங்காய் – 1 கப்
* கசகசா – 3 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* வெந்தயம் – 1 டீஸ்பூன்
* கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, வெந்தயம், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, 2 நிமிடம் வதக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு மென்மையாக வதக்கவும். அதன் பின் மஞ்சள் தூள், சாம்பார் பவுடர், உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின்பு உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் மற்றும் தக்காளி சேர்த்து பிரட்டி, புளி நீரை ஊற்றி நன்கு கிளறி, பச்சை வாசனை போகும் வரை மற்றும் காய்கறிகள் நன்கு மென்மையாக வேகும் வரை கொதிக்க விடவும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள தேங்காய், பூண்டு மற்றும் கசகசா சேர்த்து, சிறிது நீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின் அரைத்த தேங்காய் விழுதை குழம்புடன் சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி, 20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, சுவை பார்த்து உப்பு சேர்த்து கிளறி இறக்கினால், செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு காரக்குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…