நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு வரமிளகாய் சட்னி ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அதுவும்
கீழே செட்டிநாடு வரமிளகாய் சட்னி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை தவறாமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு…
* சின்ன வெங்காயம் – 1/2 கப்
* தக்காளி – 1
* வரமிளகாய் – 2
* காஷ்மீரி வர மிளகாய் – 2
* புளி – 1 டீஸ்பூன்
* கல் உப்பு – சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள சின்ன வெங்காயம், தக்காளி, வர மிளகாய், காஷ்மீரி வர மிளகாய், புளி மற்றும் கல் உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்கவும்.
* பின்பு அரைத்து வைத்துள்ள வெங்காய மிளகாய் பேஸ்ட் சேர்த்து கிளறி, பத்து நிமிடம் மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பிறகு மூடியைத் திறந்து, பச்சை வாசனை போயுள்ளதா என்பதைப் பார்த்து, பச்சை வாசனை இருந்தால், மீண்டும் 3-5 நிமிடம் வேக வைத்து இறக்கவும்.
* இப்போது சுவையான செட்டிநாடு வரமிளகாய் சட்னி தயார்.
* இந்த கார சட்னி இட்லி, தோசை, பனியாரம் என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
குறிப்பு:
* உங்களிடம் காஷ்மீரி வரமிளகாய் இல்லாவிட்டால் பரவாயில்லை. ஆனால் இந்த வகை மிளகாய் சட்னிக்கு நல்ல நிறத்தை அளிப்பதோடு, சட்னியின் காரத்தையும் குறைக்கும்.
* இந்த சட்னிக்கு நல்லெண்ணெய் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் இது தான் சட்னிக்கு நல்ல ஃப்ளேவரைத் தரும்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு வரமிளகாய் சட்னி எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு வரமிளகாய் சட்னி ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…