நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Chettinad Kara Kuzhambu Recipe: செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான குழம்பு, சாம்பார் செய்து அலுத்துப் போய்விட்டதா? அப்படியானால் ஒரு நாள் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு செய்யுங்கள். இந்த கார குழம்புடன் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் போன்றவற்றை சேர்த்துக் கொண்டால், இன்னும் அற்புதமாக இருக்கும். இந்த செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
மசாலா அரைப்பதற்கு…
* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
* மல்லி – 2 டீஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 2
* துருவிய தேங்காய் – 1/4 கப்
குழம்பு செய்வதற்கு…
* சின்ன வெங்காயம் – 1/2 கப்
* பூண்டு – 5 பல் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* உருளைக்கிழங்கு – 2 (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* கத்திரிக்காய் – 2 (வெட்டிக் கொள்ளவும்)
* வெல்லம் – 1 டேபிள் ஸ்பூன்
* புளிச்சாறு – 1 கப்
* சாம்பார் பவுடர் – 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன்
* கடுகு – 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெந்தயம், மல்லி, சோம்பு, வரமிளகாய் சேர்த்து நன்கு வறுத்து, அத்துடன் துருவிய தேங்காயையும் சேர்த்து 2-3 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு 1/2 கப் வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும். பின் அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், வெல்லம், புளிச்சாறு, சாம்பார் பவுடர் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, வேண்டுமானால் சிறிது நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து கொள்ள வேண்டும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு தேவையான நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்த தாளித்து, குக்கரில் ஊற்ற வேண்டும்.
* பின்பு அந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் அரைத்த மசாலாவையும் சேர்த்து கிளறி, நன்கு 3-4 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு ஸ்டைல் உருளைக்கிழங்கு கத்திரிக்காய் கார குழம்பு தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக Chettinad Kara Kuzhambu Recipe: செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Chettinad Kara Kuzhambu Recipe: செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…