Categories: சைவம்

Chettinad Saiva Meen Kuzhambu Recipe | செட்டிநாடு சைவ மீன் குழம்பு

நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad Saiva Meen Kulambu) ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…

தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை மற்றும் சுவையானவையும் கூட. அதோடு பலருக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்கும். இதற்கு செட்டிநாடு ரெசிபிக்களில் பயன்படுத்தும் மசாலாக்கள் தான் காரணம். செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவம் மட்டுமின்றி, சைவ ரெசிபிக்களும் அட்டகாசமாக இருக்கும். அதில் ஒரு வித்தியாசமான ரெசிபி தான் செட்டிநாடு சைவ மீன் குழம்பு. இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

கீழே செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

சைவ மீன் செய்வதற்கு…

* தட்டபயறு – 1 கப்

* பூண்டு – 2 பற்கள்

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* சோம்பு – 1 டீஸ்பூன்

* உப்பு – சுவைக்கேற்ப

குழம்பு செய்வதற்கு…

* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் + 2 டேபிள் ஸ்பூன்

* கடுகு – 1 டீஸ்பூன்

* வெந்தயம் – 1/4 டீஸ்பூன்

* சோம்பு – 1/2 டீஸ்பூன்

* கறிவேப்பிலை – சிறிது

* சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)

* பச்சை மிளகாய் – 2

* தக்காளி – 1 (நறுக்கியது)

* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் – 1.5 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

* புளிச்சாறு – 3 டேபிள் ஸ்பூன்

* தண்ணீர் – 2-3 கப்

* உப்பு – சுவைக்கேற்ப

Chettinad Saiva Meen Kulambu செய்முறை:

* முதலில் தட்டபயறை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நன்கு கழுவி விட்டு, மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் ‘சைவ மீன் செய்வதற்கு’ கொடுத்துள்ள பிற பொருட்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்பு ஒரு அலுமினியம் தாள் அல்லது வாழை இலையில் அரைத்த விழுதை தட்டையாக பரப்பி மூடி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் வேக வைத்ததை மீன் போன்று ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* பிறகு ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்து வெட்டிய துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, வெந்தயம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் தாளிக்கவும்.

* அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்த்து, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் புளிச்சாறு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க வைக்கவும்.

* இறுதியில் பொரித்து வைத்துள்ளதைப் போட்டு, குறைவான தீயில் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு சைவ மீன் குழம்பு தயார்.

இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு சைவ மீன் குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .

admin

Recent Posts

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE நாடியம்மன் கோயில் தேரோட்டம்

Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…

2 years ago

Ramaswamy Venkataraman | இரா வெங்கட்ராமன் முன்னாள் குடியரசுத் தலைவர் | ராஜாமடம்

இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…

3 years ago

அன்பு ஒன்றுதான் அனாதை இல்லை | அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் | Social Activist Balamurugan

அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…

3 years ago

முதல் சுயமரியாதைப் போராளி பட்டுக்கோட்டை அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி | Pattukkottai Alagiri

Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…

3 years ago

மனோரா கோட்டை பட்டுக்கோட்டை | Manora Fort Pattukkottai

பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…

3 years ago