நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
விடுமுறை நாட்களில் வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட விரும்புவோம். அதுவும் நீங்கள் இறால் பிரியர் என்றால், இந்த வார இறுதியில் அந்த இறாலைக் கொண்டு ஒரு சுவையான சைடு டிஷ்ஷை செய்து சாப்பிடுங்கள். அதிலும் நீங்கள் செட்டிநாடு ரெசிபியை விரும்பி சாப்பிடுபவரானால், இறாலைக் கொண்டு ஒரு செட்டிநாடு ஸ்டைல் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* இறால் – 500 கிராம்
* உப்பு – சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் – சிறிது
* மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* எண்ணெய் – 2-3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* பட்டை – 1 இன்ச்
* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* வரமிளகாய் – 2
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் சுத்தம் செய்த இறாலை ஒரு பௌலில் எடுத்து, அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பட்டை, சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கி, அதைத் தொடர்ந்து இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த மிளகு சீரக பொடி, கரம் மசாலா, சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அதன் பின் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து கிளறி, 1/4 கப் நீரை ஊற்றி 7-8 நிமிடம் இறாலை நன்கு வேக வைத்து இறக்கினால், சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை தயார்.
Image Courtesy: hattyfoods
இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…