நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான Chettinaad Prawn Chukka Recipe : செட்டிநாடு இறால் சுக்கா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
நீங்கள் இறால் பிரியரா? செட்டிநாடு ஸ்டைல் ரெசிபிக்களை விரும்பி சாப்பிடுபவரா? அப்படியானால் இந்த வார விடுமுறையில் இறால் கொண்டு ஒரு செட்டிநாடு ரெசிபியை செய்யுங்கள். அது தான் செட்டிநாடு இறால் சுக்கா. இது சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இதன் சுவை சிக்கன், மட்டன் சுக்காவைப் போன்று இருக்கும்.
தேவையான பொருட்கள்:
* இறால் – 250 கிராம் (சுத்தம் செய்தது)
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை – சிறிது
* புளி – 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* உப்பு மற்றும் மிளகுத் தூள் – சுவைக்கேற்ப
* நெய் – 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி – சிறிது
அரைப்பதற்கு…
* பூண்டு – 10 பல்
* இஞ்சி – 1 இன்ச்
* பச்சை மிளகாய் – 1
* கல்பாசி – சிறு துண்டு
* அன்னாசிப்பூ – சிறு துண்டு
* சீரகம் – 1/4 டீஸ்பூன்
* சோம்பு – 1/4 டீஸ்பூன்
* பட்டை – 1/2 இன்ச்
* வரமிளகாய் – 1
* மிளகு – 1/2 டீஸ்பூன்
* ஏலக்காய் – 2
* கிராம்பு – 2
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி நன்கு நீர் போன்று கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் 1/2 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், ஒரு சிட்டிகை பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த மசாலாவை சேர்த்து குறைவான தீயில் நன்கு கிளறி விட வேண்டும். மசாலாவில் இருந்து நீர் வற்றி, எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் இறாலை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, மசாலா இறாலுடன் நன்கு ஒன்று சேர கிளறி விட வேண்டும். அடுத்து அதில் புளிச்சாற்றினை சேர்த்து, 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, 3-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறால் வெந்ததும், அதில் மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறி இறக்கி கொத்தமல்லியைத் தூவினால், சுவையான செட்டிநாடு இறால் சுக்கா தயார்.
Image Courtesy: vidyascooking
இந்த பதிவின் மூலமாக Chettinaad Prawn Chukka Recipe : செட்டிநாடு இறால் சுக்கா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி Chettinaad Prawn Chukka Recipe : செட்டிநாடு இறால் சுக்கா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…