நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
தமிழ்நாட்டில் செட்டிநாடு ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை. செட்டிநாடு ரெசிபிக்கள் ஒவ்வொன்றும் அட்டகாசமான சுவையில் இருக்கும். அதில் ஒன்று தான் செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ். இந்த சைடு டிஷ் சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றது. குறிப்பாக இதை பிரியாணியுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். உங்கள் வீட்டில் இன்று வித்தியாசமாக என்ன செய்வதென்று யோசித்துக் கொண்டிருந்தால், இந்த செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ் செய்யுங்கள். இது நிச்சயம்
இப்போது செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ் எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ஆந்திரா ஸ்டைல் சேப்பங்கிழங்கு ஃப்ரை
தேவையான பொருட்கள்:
* சின்ன கத்திரிக்காய் – 5
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* வெல்லம் – 2 டீஸ்பூன்
* கெட்டியான புளிச்சாறு – 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு – சுவைக்கேற்ப
அரைப்பதற்கு…
* கருப்பு எள்ளு விதைகள் – 2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
* சீரகம் – 2 டீஸ்பூன்
* இஞ்சி – 1 இன்ச்
* பூண்டு – 6 பல்
* வெங்காயம் – 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் – 2
தாளிப்பதற்கு…
* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
* கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
* முதலில் கத்திரிக்காயை நீரில் கழுவி நீளத் துண்டுகளாக வெட்டி, உப்பு கலந்த நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், கருப்பு எள்ளு, வேர்க்கடலை ஆகியவற்றைப் போட்டு நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த சீரகம், கருப்பு எள்ளு, வேர்க்கடலை, இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தைப் போட்டு சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், கரம் மசாலா, மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் கத்திரிக்காய், தக்காளி சேர்த்து, குறைவான தீயில் 2 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, அதில் வெல்லம், புளிச்சாறு மற்றும் அரை கப் நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
* பிறகு மூடி வைத்து 12-15 நிமிடம் குறைவான தீயில் கத்திரிக்காய் நன்கு மென்மையாகும் வரை வேக வைத்து இறக்கினால், செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ் தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி செட்டிநாடு கத்திரிக்காய் சாப்ஸ் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…