நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மணமணக்கும்… செட்டிநாடு முட்டை குழம்பு ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
கொரோனா ஊரடங்கால் சிக்கன், மட்டன் கிடைப்பது என்பது கடினம். ஆனால் உங்கள் விடுமுறை நாளன்று நல்ல சுவையான ஒரு அசைவ ரெசிபியை செய்து சுவைக்க நினைத்தால், செட்டிநாடு முட்டை குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த முட்டை குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும்.
2 வயது குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும்.. உடனே நிதி உதவி செய்யுங்கள்!
தேவையான பொருட்கள்:
* முட்டை – 4-5
* எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – சிறிது
* பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
* தக்காளி – 2 (அரைத்துக் கொள்ளவும்)
* மல்லித் தூள் – 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
வறுத்து அரைப்பதற்கு…
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் – 1 கப்
* காஷ்மீரி வரமிளகாய் – 4-5
* மிளகு – 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் முட்டையை வேக வைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த முட்டைகளை ஆங்காங்கு கத்தியால் கீறி விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வறுத்து அரைப்பதற்கு கொடுத்துள்ள சீரகம், சோம்பு விதைகளைப் போட்டு தாளித்து, பின் துருவிய தேங்காய், வர மிளகாய் மற்றும் மிளகு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் வறுத்த பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்துள்ள முட்டையைப் போட்டு லேசாக ஒரு நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அரைத்து தக்காளியை ஊற்றி 2 நிமிடம் வேக வைத்து, பின் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* மசாலாவில் உள்ள நீர் முற்றிலும் வற்றி அடிப்பிடிக்குமாறு வறண்டு இருந்தால், அதில் கால் கப் நீரை ஊற்றி கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து மூடி வைத்து 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* மசாலா பச்சை வாசனை போய் நன்கு வெந்ததும், அதில் வேக வைத்துள்ள முட்டைகளைப் போட்டு, 3-4 வேக வையுங்கள். குழம்பு மிகவும் கெட்டியாக இருந்தால்
Image Courtesy: whiskaffair
இந்த பதிவின் மூலமாக மணமணக்கும்… செட்டிநாடு முட்டை குழம்பு எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மணமணக்கும்… செட்டிநாடு முட்டை குழம்பு ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…