நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான மொறுமொறுப்பான… சீஸி ரைஸ் பாப்பர்ஸ் ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் எஞ்சி உள்ளதா? அதேப் போல் உருளைக்கிழங்கு, சீஸ் போன்றவை உள்ளதா? அப்படியெனில் அதை வைத்து மாலை வேளையில் ஒரு அட்டகாசமான சுவையில் ஒரு ஸ்நாக்ஸ் செய்து உங்கள் குழந்தைகளுக்கு கொடுங்கள். இந்த ரெசிபியின் பெயர் சீஸி ரைஸ் பாப்பர்ஸ். இது நன்கு மொறுமொறுப்பாக அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். குறிப்பாக இது குழந்தைகளின் விருப்பமான ஸ்நாக்ஸ் ஆகவும் இருக்கும். அதோடு இந்த ரெசிபியை வீட்டிற்கு விருந்தினர்கள் வரும் போது கூட செய்யலாம். இதனால் அனைவரது பாராட்டையும் பெறுவீர்கள்.
கீழே சீஸி ரைஸ் பாப்பர்ஸ் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைக் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சாதம் – 1 கப்
* வேக வைத்த உருளைக்கிழங்கு – 1
* புதினா இலைகள் – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி இலைகள் – 1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 1/2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* பிரட் தூள் – 2 டீஸ்பூன்
* சீஸ் துண்டுகள் – 2
* உப்பு – சுவைக்கேற்ப
கோட்டிங்கிற்கு…
* மைதா – 3 டீஸ்பூன்
* பிரட் தூள் – 4-5 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சாதம் மற்றும் வேக வைத்த உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் புதினா, கொத்தமல்லி, மிளகாய் தூள், பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு, மிளகுத் தூள், பிரட் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு சீஸ் துண்டுகளை 4 நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்து வைத்துள்ள மாவில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து, அதை உள்ளங்கையில் வைத்து தட்டையாக தட்டி, அதன் நடுவே ஒரு துண்டு சீஸ் வைத்து, மூடிக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* அதற்குள் மைதாவை நீர் சேர்த்து ஓரளவு நீர் போன்று கரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தயாரித்து வைத்துள்ள உருண்டைகளை மைதா நீரில் பிரட்டி, பின் அதை பிரட் தூளில் ஒருமுறை பிரட்டி, பின்பு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்தால், சீஸி ரைஸ் பாப்பர்ஸ் தயார்.
Image Courtesy: archanaskitchen
இந்த பதிவின் மூலமாக மொறுமொறுப்பான… சீஸி ரைஸ் பாப்பர்ஸ் எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி மொறுமொறுப்பான… சீஸி ரைஸ் பாப்பர்ஸ் ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…