நமது தளத்தில் பல்வேறு சமையல் செய்முறைகள் பற்றி பதிவிட்டு வருகிறோம் அதன் தொடர்ச்சியாக, இந்த பதிவில் சுவையான சன்னா பட்டர் மசாலா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கப் போகிறோம். இதனை முயற்சி செய்து உங்களின் பிரியாமானவர்களுக்கு அளித்து மகிழுங்கள்…
இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது நாண் செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் வீட்டில் உள்ளோரை அசத்தும் வகையில் சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சன்னா பட்டர் மசாலா செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையில் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு இது நிச்சயம் பிடிக்கும்.
இப்போது சன்னா பட்டர் மசாலாவை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சன்னா – 1 கப்
* வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் + 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* காய்ச்சிய பால் – 1/4 கப்
* மலாய் க்ரீம் – 1 டேபிள் ஸ்பூன்
* உலர்ந்த வெந்தய கீரை – 1 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
வதக்கி அரைப்பதற்கு…
* வெண்ணெய் – 1 டீஸ்பூன்
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* வெங்காயம் – 2 (நறுக்கியது)
* தக்காளி – 3 (நறுக்கியது)
* முந்திரி – 6
* பச்சை மிளகாய் – 1
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சன்னாவை நீரில் குறைந்தது 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின் அதை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி குக்கரை மூடி, அடுப்பில் வைத்து, 5-6 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும். சன்னாவானது நன்கு மென்மையாக வெந்திருக்க வேண்டும். ஒருவேளை வேகவில்லை என்றால் மீண்டும் ஒரு 2 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும், வதக்கி அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக மென்மையாக வதக்கி இறக்கி குளிர வைக்கவும்.
* பிறகு வதக்கியதை மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீர் சேர்த்து மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
* அடுத்து அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், இஞ்சி பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய் தூள், சேர்த்து வதக்கி, பின் அரைத்ததை சேர்க்கவும்.
* பின் அதில் மல்லித் தூள் மற்றும் பால் ஊற்றி சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
* அதன் பின் வேக வைத்துள்ள சன்னாவை வேக வைத்த நீருடன் ஊற்றி கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
* இறுதியில் கரம் மசாலா, காய்ந்த வெந்தய கீரை, பிரஷ் க்ரீம் சேர்த்து நன்கு கிளறி, குறைவான தீயில் 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, மேலே சிறிது வெண்ணெயைப் போட்டு மூடி வைத்தால், சுவையான சன்னா பட்டர் மசாலா தயார்.
குறிப்பு:
*
* விருப்பமுள்ளவர்கள் முந்திரியை தனியாக அரைத்து சேர்த்துக் கொள்ளலாம்.
* ஒருவேளை சன்னாவை இரவு நேரத்தில் ஊற வைக்க மறந்துவிட்டால், பகலில் நல்ல சூடான நீரில் சன்னாவைப் போட்டு, 5-6 மணிநேரம் மூடி வைத்து ஊற வையுங்கள்.
* க்ரீம் இல்லாதவர்கள், அதைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
* முந்திரி இல்லாவிட்டால், அதற்கு பதிலாக பாதாமை சேர்த்துக் கொள்ளலாம்.
Image Courtesy: sharmispassions
இந்த பதிவின் மூலமாக சன்னா பட்டர் மசாலா எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்களும் இதை பின்பற்றி சன்னா பட்டர் மசாலா ரெசிப்பி செய்து எப்படி இருந்தது என்று கமென்ட் செய்யுங்கள் அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலும் கமென்ட் செய்யுங்கள் பதிலளிக்கிறோம். உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கு பகிருங்கள். .
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை Agricultural Technology Management Agency ATMA : அட்மா திட்டம் தமிழ்நாட்டில் 2005-06 ஆம்…
Pattukkottai Nadiamman Temple Therottam LIVE ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் புகழ்பெற்று விளங்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா…
இரா. வெங்கட்ராமன் (Ramaswamy Venkataraman), (டிசம்பர் 4, 1910 - ஜனவரி 27, 2009) இந்தியாவின் எட்டாவது குடியரசுத் தலைவராகப்…
அமரர் ஊர்தியை பொதுமக்களுக்கு அர்ப்பணித்த சமூக ஆர்வலர் Social Activist Balamurugan: உயிரோடு இருக்கும் போது மதிக்காத உறவுகள்.. இறந்த…
Pattukkottai Alagiri: திராவிட இயக்கத் தலைவர்களில், அஞ்சா நெஞ்சன், தளபதி என்ற இரு அடைமொழிகளாலும் அறியப்பட்டவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி தீவிரமாகப்…
பட்டுக்கோட்டை அருகே கடலோரத்தில் உள்ள மல்லிப்பட்டினத்தில் உள்ள சுற்றுலா தலம் மனோரா (Manora Fort ). சென்னையில் இருந்து கன்னியாகுமரி…